மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சந்திம சில்வா பொறுப்பேற்றார்
மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சந்திம சில்வா இன்று (2025 ஜனவரி 24) கட்டளைத் தலைமையகத்தில் பதவியேற்றார்.
கடற்படை மரபுப்படி மேற்கு கடற்படை கட்டளைக்கு ரியர் அட்மிரல் சந்திம சில்வாவை வரவேற்ற பின்னர், கடற்படையின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய கடற்படையின் பிரதிப் பிரதானி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க, புதிய தளபதியிடம் தனது கடமைகளை கட்டளை தலைமையகத்தில் கையளித்தார்.
மேலும், மேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகளின் வாழ்த்துக்களை தெரிவித்த பின்னர், ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க, கடற்படை மரபுப்படி மேற்கு கடற்படை கட்டளையிலிருந்து பிரியாவிடை பெற்றார்.