இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீன்பிடி படகுகள் மன்னார் வடக்கு கடற்பரப்பில் கைது

இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து 2025 ஜனவரி 25 இரவு மற்றும் இன்று காலை (2025 ஜனவரி 26) மன்னாருக்கு வடக்கே இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பில் சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட (34) இந்திய மீனவர்கள், (03) இந்திய மீன்பிடி படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.

நாட்டின் கடல் எல்லையை மீறி வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கவும், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் கடற்படை மற்றும் கடலோர காவல்படை திணைக்களம் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அதன்படி, 2025 ஜனவரி 25 இரவு மற்றும் இன்று (2025 ஜனவரி 26) அதிகாலையில் தலைமன்னாரிற்கு வடக்கே இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீன்பிடிக் கப்பல்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட மீன்பிடிக் கப்பல்களை வடமத்திய கடற்படை கட்டளை மற்றும் கடலோர காவல்படை இணைந்து விரைவு தாக்குதல் கப்பல்கள் மற்றும் கடலோர ரோந்து கப்பல்கள் மூலம் மேற்கொண்ட தேடல் நடவடிக்கையின் போது, அங்கு இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த மூன்று (03) இந்திய மீன்பிடி படகுகளுடன் (34) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட மூன்று (03) இந்திய மீன்பிடி படகுகளும், படகில் இருந்த 34 இந்திய மீனவர்களும் இரணைதீவுக்கு அழைத்து வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.