இந்தோனேசிய கடற்படை கப்பல் 'KRI BUNG TOMO - 357' கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான 'KRI BUNG TOMO - 357' என்ற போர்க்கப்பல் விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை இன்று (2025 ஜனவரி 31) வந்தடைந்தது. மேலும், கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படை கப்பலை வரவேற்றது.
இவ்வாறாக, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 'KRI BUNG TOMO - 357' என்ற Multirole Light Frigate ரக கப்பலானது 95 மீட்டர் நீளமும், மொத்தம் 111 உறுப்பினர்களை உள்ளடக்கியதுடன், கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் (N) DEDI GUNAWAN WIDYATMOKO கடமைப்புறிகிறார்.
மேலும், இந்த போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், கப்பலின் அங்கத்தவர்கள் தீவின் முக்கிய இடங்களை பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளனர், மேலும் விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்த பின்னர், 'KRI BUNG TOMO - 357' போர்க்கப்பலானது 2025 பிப்ரவரி 1 அன்று இலங்கையில் இருந்து புறப்படவுள்ளது.