இந்தோனேசியக் கடற்படைக் கப்பல் 'KRI BUNG TOMO - 357' நட்புரீதியான விஜயத்திற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான 'KRI BUNG TOMO - 357' என்ற போர்க்கப்பல் இன்று (2025 பெப்ரவரி 16) கொழும்பு துறைமுகத்திற்கு சிநேகபூர்வ விஜயத்திற்காக வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்றனர்.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள Multirole Light Frigate ரக ‘KRI BUNG TOMO - 357’ போர்க்கப்பல் 95 மீட்டர் நீளமும் மொத்தம் 111 உறுப்பினர்களை உள்ளடக்கியதுடன், கப்பலின் கட்டளை அதிகாரியாக் கெப்டன் (N) DEDI GUNAWAN WIDYATMOKO கடமையாற்றுகின்றார்.
மேலும், இந்தப் போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், கொழும்பில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களை பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளதுடன், நட்புரீதியான விஜயத்தின் பின்னர், 'KRI BUNG TOMO - 357' என்ற கப்பல் 2025 பெப்ரவரி 17 ஆம் திகதி இலங்கையை விட்டுப் புறப்பட உள்ளது.