நிகழ்வு-செய்தி
கொழும்பு ராயல் கல்லூரி கடற்படை தளபதிக்கு மரியாதை செலுத்தியது

கொழும்பு, ராயல் கல்லூரியின் புகழ்பெற்ற முன்னாள் மாணவரான வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்டதன் பேரில் மரியாதை செலுத்தும் விழா இன்று (2020 செப்டம்பர் 18) கொழும்பு ராயல் கல்லூரியில் நடைபெற்றது.
18 Sep 2020
தொற்று அல்லாத நோய்களிலிருந்து கடற்படை வீரர்களைப் பாதுகாப்பது குறித்த பயிற்சி பட்டறை

கடற்படைப் பணியாளர்களை தொற்று அல்லாத நோய்களிலிருந்து பாதுகாத்தல் மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் கடற்படைத் தலைமையகத்தின் அட்மிரல் சோமதிலக திசானநாயக்க ஆடிட்டோரியத்தில் 2020 செப்டம்பர் 16 ஆம் திகதி ஒரு பயிற்சி பட்டறை நடைபெற்றது.
18 Sep 2020
இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதர் அதிமேதகு எம். அஷ்ரப் ஹைதாரி (M Ashraf Haidari) கடற்படை தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் தூதர் அதிமேதகு எம். அஷ்ரப் ஹைதாரி (M Ashraf Haidari) இன்று (2020 செப்டெம்பர் 16) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெத்தேன்னவை சந்தித்தார்.
16 Sep 2020
கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி இந்திய கடலோர காவல்படையின் 'சுஜே' மற்றும் 'சமுத்ர பெஹேரிதார்' கப்பல்களை கண்காணித்தார்

கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி, இந்திய கடலோரக் காவல்படையின் 'சுஜே'(ICGS Sujay) மற்றும் 'சமுத்ர பெஹேரிதார்'(ICGS Samudra Paheredar) கப்பல்களின் கட்டளை அதிகாரிகளை திருகோணமலையில் சந்தித்து ‘எம்டி நியூ டயமண்ட்’ கப்பலின் பேரழிவு நிலைமையை நிர்வகிப்பதில் அவர்கள் அளித்த விதிவிலக்கான ஒத்துழைப்புக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
16 Sep 2020
கமடோர் ஜெயந்த கமகே தென்கிழக்கு கடற்படை கட்டளையின் செயல் தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

கமடோர் ஜெயந்த கமகே தென்கிழக்கு கடற்படை கட்டளையின் செயல் தளபதியாக 2020 செப்டம்பர் 15 அன்று கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
16 Sep 2020
யாழ்ப்பாண தீபகற்பத்தில் பாடசாலை மாணவர்களுக்கு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு கடற்படையால் கடல் சுற்று பயணம்

யாழ்ப்பாண தீபகற்பத்தில் உயர்தர வகுப்புகளில் படிக்கும் 200 மாணவர்களுக்கு மற்றும் அப்பகுதி அரசு அதிகாரிகளின் சில நபர்களுக்கு வட கடலில் கடல் சுற்று பயணமொன்று கடந்த வார இறுதியில் கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.
15 Sep 2020
ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதியாக 2020 செப்டம்பர் 14 அன்று கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
15 Sep 2020
கடற்படை சேவா வனிதா பிரிவு மற்றும் கடற்படை நல பிரிவு மூலம் கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு ஒரு மில்லியன் ரூபாய்க்கு மேற்பட்ட நன்கொடை

கடற்படை சேவா வனிதா பிரிவு மற்றும் கடற்படை நல பிரிவு ஆகியவை இணைந்து கொழும்பு மெலே வீதியில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் பயன்பாட்டிற்காக 01 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு 2020 செப்டம்பர் 14 ஆம் திகதி சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன தலைமையில் கல்லூரி ஆடிட்டோரியத்தில் இடம்பெற்றது.
15 Sep 2020
MT New Diamond கப்பலில் பொறியாளரின் நிலை குறித்து விசாரிக்க வைத்தியசாலைக்குச் சென்ற கடற்படையினர்

கடந்த செப்டம்பர் 03 ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த MT New Diamond கப்பலில் இருந்து மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கப்பலின் மூன்றாவது பொறியாளரின் நிலை குறித்து விசாரிக்க 2020 செப்டம்பர் 13 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் மூன்று பேருக்கும் வாய்ப்பு கிடைத்தது.
14 Sep 2020
கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் கபில சமரவீர நியமனம்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவரும், ஆயுதப்படைகளின் தலைவருமான அதிமேதகு கோட்டபய ராஜபக்ஷ அவர்கள் ரியர் அட்மிரல் கபில சமரவீரவை இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக 2020 செப்டம்பர் 12 முதல் அமல்படுத்தினார். அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நியமனக் கடிதத்தை ரியர் அட்மிரல் கபில சமரவீரவிடம் இன்று (2020 செப்டம்பர் 14) அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார், மேலும் புதிய நியமனத்தில் ஒப்படைக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
14 Sep 2020