நிகழ்வு-செய்தி
கடற்படைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நேரடி நுழைவு அதிகாரிகளின் அணிவகுப்பு மற்றும் சேவை நுழைவு வேட்பாளர்களை ஆணையிடுதல் விழா கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் இடம்பெற்றது.

கடற்படைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 1/2019 ஆட்சேர்ப்பின் 13 நேரடி நுழைவு அதிகாரிகளின் அணிவகுப்பு மற்றும் 1/2019 ஆட்சேர்ப்பின் சேவை நுழைவு வேட்பாளர்களை ஆணையிடுதல் விழா 2020 செப்டம்பர் 11 அன்று திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில் நடைபெற்றது.
12 Sep 2020
சிறப்பு படகு படையின் சின்னம் அணியும் விழா கடற்படைத் தளபதியின் தலைமையில்

கடற்படை சிறப்பு படகு படையின் 27 ஆம் ஆட்சேர்ப்பில் 03 அதிகாரிகள் மற்றும் 29 வீர்ர்களுக்கு சின்னம் அணியும் விழா 2020 செப்டம்பர் 10 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலைமையில் திருகோணமலை சிறப்பு படகு படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
12 Sep 2020
கடற்படைத் தளபதி கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இலங்கை கடற்படையின் 24 வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக 2020 செப்டம்பர் 10 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொன்டுள்ளார்.
12 Sep 2020
தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சனத் உத்பல கடமையேற்பு

இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சனத் உத்பல 2020 செப்டம்பர் 09 ஆம் திகதி இலங்கை தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் கடமை யேற்றினார்.
11 Sep 2020
இலங்கை கடற்படை கப்பல் ‘ரங்கல’ நிறுவனம் 53 வது ஆண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறது

மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ‘ரங்கல’ நிறுவனத்தின் 53 வது ஆண்டுவிழா 2020 செப்டம்பர் 09 ஆம் திகதி பெருமையுடன் கொண்டாடப்பட்டது.
11 Sep 2020
கடற்படை தளபதி இந்திய கடலோர காவல்படையின் அமேயா கப்பலை (ICGS AMEYA) பார்வையிட்டார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (2020 செப்டம்பர் 10) திருகோணமலையில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான அமேயா (ICGS AMEYA) கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டன்ட் ஏ.கே பாண்டேவை சந்தித்து எம்டி நியூ டயமண்ட் கப்பலின் பேரழிவு நிலைமையை நிர்வகிப்பதில் வழங்கிய சிறந்த உதவிக்கு இந்திய கடலோர காவல்படைக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
10 Sep 2020
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்திப்பு

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் ட்ரவிஸ் கொக்ஸ் உட்பட குழுவினர் 2020 செப்டெம்பர் 09 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெத்தேன்னவை சந்தித்தனர்.
10 Sep 2020
கடற்படையினரால் அம்பார மாவட்டத்தில் நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பொது மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது

கடற்படையின் மற்றொரு சமூக சேவையாக அம்பார மாவட்டத்தில் மஹஓயா புலாவல மஹா விஹாரயவில் நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 2020 செப்டம்பர் 07 அன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
09 Sep 2020
வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரைகள் கடற்படையின் பங்களிப்பால் சுத்தம் செய்யப்பட்டன

தீவைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதியை மாசு இல்லாத மண்டலமாக பராமரிக்க கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடற்கரைகளை கடந்த வாரம் கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டன.
08 Sep 2020
யாழ்ப்பாண தீபகற்பத்தில் பாடசாலை மாணவர்களுக்காக கடற்படையால் மேலும் ஒரு கடல் சுற்று பயணம்

யாழ்ப்பாண தீபகற்பத்தில் உயர்தர வகுப்புகளில் படிக்கும் 169 மாணவர்களுக்காக 2020 செப்டம்பர் 06 அன்று வட கடலில் கடல் சுற்று பயணமொன்று கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.
07 Sep 2020