நிகழ்வு-செய்தி

இலங்கையின் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் மூலம் கடற்படைக்கு பல மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன

இலங்கையில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அசோக் ராவ், இன்று (2020 ஜூன் 03) கடற்படையின் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு திட்டங்களுக்காக தேவையான பல மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கினார்.

03 Jun 2020

தடைசெய்யப்பட்ட பல மீன்பிடி வலைகள் கடற்படையினரால் கைது

2020 ஜூன் 02 ஆம் திகதி மட்டக்களப்பு களப்பு பகுதியில் நடத்திய ரோந்துப் பணியின் போது கொடுவமட பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 04 தடைசெய்யப்பட்ட வலைகள் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.

03 Jun 2020

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 13 நபர்கள் கடற்படையால் கைது

திருகோணமலை வலைத்தோட்டம் மற்றும் கும்புருபிட்டி பகுதிகளுக்கு அப்பால் கடலில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 13 நபர்கள் கடற்படையினரால் 2020 ஜூன் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்டனர்.

03 Jun 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த நாங்கு (04) கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த நாங்கு (04) கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 01 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

02 Jun 2020

பூஸ்ஸ மற்றும் கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மேலும் எட்டு (08) நபர்கள் வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை முகாமில் மற்றும் கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 08 நபர்கள் 2020 ஜூன் 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் மையங்களை விட்டு வெளியேறினர்.

02 Jun 2020

சட்டவிரோத போதை மாத்திரைகள் கொண்ட ஒரு நபர் (01) கடற்படை உதவியுடன் கைது

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸார் ஒருங்கிணைந்து 2020 ஜூன் 01 ஆம் திகதி திருகோணமலை, பொடுவகட்டு பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத போதை மாத்திரைகள் கொண்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

02 Jun 2020

உள்ளூர் கஞ்சா கொண்ட ஒரு நபர் (01) கடற்படை உதவியுடன் கைது

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஒருங்கிணைந்து 2020 ஜூன் 01 ஆம் திகதி அம்பாறை, ஹுலன்னுகே பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் பொது உள்ளூர் கஞ்சா வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

02 Jun 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 08 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 08 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 மே 31 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

01 Jun 2020

பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 14 நபர்கள் மையத்தை விட்டு வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 14 நபர்கள் இன்று (2020 ஜூன் 01) மையத்தை விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர்.

01 Jun 2020

இந்திய கடற்படைக் கப்பல் "ஐ.என்.எஸ் ஜலாஷ்வா" (INS Jalashwa) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

இலங்கையில் தங்கி இருக்கும் 700 இந்திய நாட்டினர் மீன்டும் தாய் நாட்டுக்கு அழைத்துச் செல்ல இந்திய கடற்படைக்கு சொந்தமான "ஐ.என்.எஸ் ஜலாஷ்வா" (INS Jalashwa) கப்பல் இன்று (2020 ஜூன் 1) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது. இந்த இராஜதந்திர பணிக்கு இலங்கை கடற்படை உதவி வழங்கியது.

01 Jun 2020