நிகழ்வு-செய்தி

49 கிலோ கிராமுக்கு மேற்பட்ட உள்ளூர் கஞ்சாவுடன் இருவர் (02) கைது செய்ய கடற்படை உதவி

இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு இணைந்து 2020 ஏப்ரல் 23 அன்று தனமல்வில உஸ்ஸல்ல மற்றும் குடாவெவ பகுதிகளில் ஒரு கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர், அப்போது 49 கிலோ கிராமுக்கு மேற்பட்ட உள்ளூர் கஞ்சா கொண்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

24 Apr 2020

சதுப்புநில தாவரங்கள் வெட்டிய மூன்று நபர்கள் (03) கடற்படையினரால் கைது

2020 ஏப்ரல் 23 ஆம் திகதி மன்னார் திருகேதிஸ்வரம் களப்பு பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்துப் பணியின் போது சதுப்புநில தாவரங்கள் வெட்டிய மூன்று நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

24 Apr 2020

தடைசெய்யப்பட்ட பல மீன்பிடி வலைகள் கடற்படையினரால் கைது

2020 ஏப்ரல் 23 ஆம் திகதி மட்டக்களப்பு களப்பு பகுதியில் நடத்திய ரோந்துப் பணியின் போது மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 11 தடைசெய்யப்பட்ட வலைகள் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.

24 Apr 2020

சட்டவிரோத மதுபானங்களை தயாரித்த மற்றும் விற்பனை செய்த நான்கு நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை 2020 ஏப்ரல் 22 ஆம் திகதி புத்தலம் சேதபொல பகுதியில் நடத்திய ரோந்து நடவடிக்கையின் மற்றும் 2020 ஏப்ரல் 22 மற்றும் 23 திகதிகளில் வெண்ணப்புவ பகுதியில் நடத்திய சிறப்பு தேடல் நடவடிக்கையின், சட்டவிரோத மதுபானங்களை தயாரித்த மற்றும் விற்பனை செய்த மூன்று இடங்கள் சோதனை செய்தனர். அப்போது சட்டவிரோத உள்நாட்டு மதுபானம், கோடா மற்றும் மதுபானங்கள் தயாரிக்கப் பயன்படுத்திய பிற உபகரணங்களுடன் நாங்கு (04) நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

23 Apr 2020

கடற்படை மேலும் பல கிருமி நீக்கும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது

நாட்டில் 'புதிய கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட பல கிருமி நீக்கும் திட்டங்கள் 2020 ஏப்ரல் 21 மற்றும் 22 திகதிகளில் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வளாகம், தேர்தல் செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் ஆணையம், கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் கொழும்பு பகுதியில் உள்ள வங்கிகள் மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டன.

23 Apr 2020

93 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கஞ்சா கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன

2020 ஏப்ரல் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், வெத்தலகேனி, கடெய்காடு தெற்கு கரைக்கு கடலில் இருந்து தரையிறக்க முயன்ற 93 கிலோவுக்கு மேற்பட்ட கஞ்சாவுடன் இரண்டு நபர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

23 Apr 2020

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட வணிகக் கப்பலில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது இறந்த நபரின் சடலத்தை கொண்டு வர கடற்படை உதவி

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட வணிகக் கப்பலான ‘MV GRACE’ கப்பலில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, மாரடைப்பால் திடீரென இறந்த நபரின் சடலத்தை கப்பலில் இருந்து இறக்குவதற்கும், அதை கப்பல் நிறுவனத்தின் உள்ளூர் முகவரிடம் ஒப்படைப்பதற்கும் இன்று (2020 ஏப்ரல் 22). இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

22 Apr 2020

Colombo International Container Terminals (CICT) நிறுவனம் மூலம் கடற்படைக்கு பாதுகாப்பு முகமூடிகள் நன்கொடையாக வழங்கப்பட்டது

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக Colombo International Container Terminals நிறுவனம் பல பாதுகாப்பு முகமூடிகள் இன்று (2020 ஏப்ரல் 22) கடற்படை கலங்கரை விளக்கம் உணவகத்தில் வைத்து கடற்படைக்கு நன்கொடையாக வழங்கியது.

22 Apr 2020

தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் தொடர் இன்னிசை நிகழ்ச்சிகள்

கொழும்பு பகுதியில் மாடி கட்டடங்களில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் கவலை மற்றும் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் இன்னிசை நிகழ்ச்சி தொடரின் மேலும் ஒரு இசை நிகழ்ச்சி 2020 ஏப்ரல் 21 ஆம் திகதி கம்பஹ பகுதி மையமாகக் கொண்டு இடம்பெற்றது.

22 Apr 2020

சவுக்காடி கடற்கரையில் இருந்து RPG ரவையொன்று கடற்படையால் கண்டு பிடிக்கப்பட்டன

2020 ஏப்ரல் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம், மணிப்பாய் சவுக்காடி கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கடற்படை RPG ரவையொன்று கண்டுபிடித்தது.

22 Apr 2020