நிகழ்வு-செய்தி
கடற்படையின் இரத்த தானம் திட்டம்

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியொன்று இன்று (2024 ஜூன் 19,) வடக்கு கடற்படை கட்டளை வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
19 Jun 2024
RIMPAC – 2024 பயிற்சியில் பங்கேற்கும் கடற்படை வீரர்களுக்கு கடற்படை தளபதி இலங்கை கொடியை பொருத்தினார்

அமெரிக்காவின் இந்தோ பசிபிக் கட்டளையால் (US Indo Pacific Command) ஏற்பாடு செய்யப்படுகின்ற Rim of the Pacific 2024 (RIMPAC 2024) பலதரப்பு கடல்சார் பயிற்சியில் பங்கேற்க உள்ள இலங்கை கடற்படையின் ஆறு (06) அதிகாரிகள் மற்றும் பதினாறு (16) மாலுமிகளுக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் இன்று (2024 ஜூன் 19) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சீருடைகளில் இலங்கை கொடியை பொருத்தப்பட்டது.
19 Jun 2024
சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் குழு கடற்படை தலைமையகத்திற்கு வருகை

இலங்கைக்கு ஆய்வு விஜயம் மேற்கொண்டுள்ள சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பணியாளர் பாடநெறியை பயிலும் Rear Admiral Hu Gangfeng தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று (2024 ஜூன் 18) கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்ததுடன் அதிகாரி குழுவின் தலைவர் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பும் கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
18 Jun 2024
கொமடோர் பிரசாந்த அந்தோணி கடற்படை மின்சாரம் மற்றும் இலத்திரனியல் பொறியியல் பதில் பணிப்பாளர் நாயகமாக கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கை கடற்படையின் மின்சாரம் மற்றும் இலத்திரனியல் பொறியியல் பதில் பணிப்பாளர் நாயகமாக கொமடோர் பிரசாந்த அந்தோனி இன்று (2024 ஜூன் 13) கடற்படைத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
13 Jun 2024
ரியர் அட்மிரல் விராஜ் லீலாரத்ன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

34 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் விராஜ் லீலாரத்ன தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 ஜூன் 13) ஓய்வு பெற்றார்.
13 Jun 2024
உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு நடமாடும் பல் மருத்துவ சேவையொன்று கடற்படையால் நடத்தப்பட்டது

உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, இலங்கை கடற்படையினர் திருகோணமலை பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்காக நடமாடும் பல் மருத்துவ சேவையொன்று 2024 ஜூன் 11 ஆம் திகதி மற்றும் இன்று (12 ஜூன் 2024) வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
12 Jun 2024
உலகப் பெருங்கடல் தினத்தை முன்னிட்டு கடற்படையினர் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்
இன்று (2024 ஜூன் 08,) ஈடுபட்டுள்ள 'எழுந்து, ஆழ்ந்து சிந்தித்து கடல் சூழலைப் பாதுகாக்க எங்களுடன் இணையுங்கள்' என்ற தொனிப் பொருளுக்கு அமைய உலகப் பெருங்கடல் தினத்துடன் இணைந்து கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டமொன்று 2024 ஜூன் மாதம் 06 ஆம் திகதி ஆறுகம்பே கடற்கரையில் நடத்துவதற்கு கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.
08 Jun 2024
கடற்படையின் இரத்த தானத் திட்டம்

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியொன்று 06 ஜூன் 2024 அன்று வட மத்திய கடற்படை கட்டளை வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.
07 Jun 2024
கடற்படை சமூக பணித் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட 1000வது நீர் சுத்திகரிப்பு நிலையம் கல்கமுவ, பாலுகடவல ஸ்ரீ சுமண வித்தியாலயத்தில் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் உள்ள பொதுமக்களின் சுத்தமான குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவினால் ஆரம்பிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவும் திட்டத்தின் கீழ், கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் மற்றும் தேசிய லொத்தர் சபையின் நிதி பங்களிப்புடன், கல்கமுவ, பாலுகடவல ஸ்ரீ சுமண வித்தியாலயத்தில் நிறுவப்பட்ட 1,000 வது நீர் சுத்திகரிப்பு நிலையம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் தேசிய லொத்தர் சபையின் தலைவர் கலாநிதி சமீர சி.யாப்பா அபேவர்தன ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்று (2024 ஜூன் 05) பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.
05 Jun 2024
இலங்கை கடற்படை கப்பல் தக்ஷின நிருவனத்தின் புதிய அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் நவீனமயமாக்கப்பட்ட வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது

கடற்படை சேவா வனிதா பிரிவின் நிதியுதவி மற்றும் வைத்தியசாலை சேவை சங்கத்தின் தலைவர் ராஜகீய பண்டித பூஜ்ய ராஜ்வெல்லே சுபூதி தேரரால் நன்கொடையாக வழங்கப்பட்ட வைத்தியசாலை உபகரணங்களினால் இலங்கை கடற்படை கப்பல் தக்ஷின நிருவனத்தில் நிறுவப்பட்டுள்ள புதிய அவசர சிகிச்சை பிரிவு மற்றும் நவீனமயமாக்கப்பட்ட வைத்தியசாலை தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவின் தலைமையில் 2024 ஜூன் 03 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
04 Jun 2024