நிகழ்வு-செய்தி
செல்ல கதிர்காமம் ஸ்ரீ தர்ம நிகேதன மகா பிரிவேன் ஆலயத்தின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிகளைக் கொண்ட சங்கவாசகம் கடற்படைத் தளபதி தலைமையில் திறந்து வைக்கப்பட்டு மகா சங்கத்தினருக்கு சமர்ப்பணம் செய்யப்படவுள்ளது.

இலங்கை கடற்படையின் தொழிநுட்ப மற்றும் தொழிநுட்ப பங்களிப்புடன், மஹா சங்கத்தினருக்கான செல்ல கதிர்காமம் ஸ்ரீ தர்ம நிகேதன மகா பிரிவேன் விகாரையின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி சங்கவாசம் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி கடற்படைத் தளபதியான வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் நடைபெற்றது.
13 May 2024
கடற்படையினர் மூலம் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அபாயங்கள் விழிப்புணர்வு பயிற்சியை திருகோணமலையில் வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.

இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) அபாயங்கள் பொது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் சிறப்பு விழிப்புணர்வு பயிற்சி 2024 முதல் காலாண்டில் திருகோணமலை அஷ்ரோஃப் ஜெட்டியில் சிறப்பு விழிப்புணர்வு பயிற்சியை நடத்த கடற்படையினரால் திட்டமிடப்பட்டது.
13 May 2024
பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் குழு கடற்படை தலைமையகத்தை பார்வையிடுகிறது

இலங்கைக்கான ஆய்வுப் பயணமாக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பணியாளர் பாடநெறியில் பயிலும் மாணவர் அதிகாரிகளைக் கொண்ட விமானப்படை அதிகாரி Air Cdre Faisal Fazal Muhammad Khan தலைமையிலான அதிகாரிகள் குழு 2024 மே மாதம் 07ம் திகதி அன்று கடற்படைத் தலைமையகத்திற்குச் சென்ற அவர்கள் அங்கு தலைமை பணியாளர் ரியர் அட்மிரால் பிரதீப் ரத்நாயக்கவைச் சந்தித்தனர்.
08 May 2024
ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு அதிக சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்குவதாக கூறி ரஷ்யா-உக்ரைன் யுத்தத்தில் முன்னணி போர்களுக்கு அனுப்பும் மனித கடத்தலொன்று பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

இலங்கையின் முப்படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவத்தினரை ரஷ்ய மற்றும் உக்ரேனியப் படைகளுடன் இணைக்கப்பட்டு, குடியுரிமை உள்ளிட்ட பெரும் சலுகைகளைப் பெற்றுத் தருவதாக கூறி சுற்றுலா வீசா மூலம் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு ரஷ்யா-உக்ரைன் யுத்தத்தில் முன்னணி போர்களுக்கு அனுப்பும் மனித கடத்தலொன்று பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது.
08 May 2024
கடற்படையின் சிரேஷ்ட மாலுமிகளுக்கான ஒரு நாள் பட்டறை வெற்றிகரமாக நடைபெற்றது

கடற்படையின் அனைத்துக் பிரிவுகளின் மூத்த மாலுமிகள் (Branch Head Sailors), நிறுவனங்கள் மற்றும் கப்பல்களின் ஒழுக்காற்றுக் கட்டுப்பாட்டாளர்கள், சிரேஷ்ட கடற்படைத் தலைவர்கள், பயிற்சிப் பாடசாலைகளில் தலைமை பயிற்சி பயிற்றுனர்கள் மற்றும் தலைமைப் பயிற்றுவிப்பாளர்களுக்கான ஒரு நாள் பட்டறையொன்று 2024 மே 03 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் உள்ள அட்மிரல் சோமதிலக திசாநாயக்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
06 May 2024
ரியர் அட்மிரல் சிசிர திஸாநாயக்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

33 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் சிசிர திஸாநாயக்க தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 மே 05) ஓய்வு பெற்றார்.
05 May 2024
ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

34 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 மே 04) ஓய்வு பெற்றார்.
04 May 2024
கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம் மேற்கொண்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்கள் 2024 ஏப்ரல் 23 ஆம் திகதி நாகதீப புராண ரஜமஹா விகாரைக்கு மரியாதை செலுத்தினார்.
24 Apr 2024
இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாடு கொழும்பில் இடம்பெற்றது

இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான கருத்தரங்கு (Seminar on India - Sri Lanka Defence Co-Operation) 2024 ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டல் வளாகத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் இந் நிகல்விள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்து கொண்டார்.
12 Apr 2024
தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க பதவியேற்பு

தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க இன்று (2024 ஏப்ரல் 08) தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பதவியேற்றார்.
09 Apr 2024