நிகழ்வு-செய்தி
கடற்படையின் இரத்த தான திட்டம்

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சி யொன்று 2024 ஏப்ரல் 06 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் ஏற்பாட்டில் திருகோணமலை பொது வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
07 Apr 2024
கொமடோர் சனத் பிடிகல கடற்படை காலாட்படையின் பதில் கட்டளைத் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்

இலங்கை கடற்படை காலாட்படையின் பதில் கட்டளைத் தளபதியாக கொமடோர் சனத் பிடிகல இன்று (2024 ஏப்ரல் 02) கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கடற்படை காலாட்படை தளபதி அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
02 Apr 2024
புதிய பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்

இலங்கை காவல்துறையின் 36வது பொலிஸ் மா அதிபராக பதவியேற்ற தேஷபந்து தென்னகோன் அவர்கள் இன்று (2024 ஏப்ரல் 01) கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.
01 Apr 2024
காலி முகத்திடலில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கான கடமைகள் மற்றும் ஜனாதிபதி மாளிகையில் விசேட சம்பிரதாய மரியாதைக்கான கடமைகள் கடற்படையிடமிருந்து விமானப்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளன

கொழும்பு, காலி முகத்திடலில் தேசியக் கொடியை ஏற்றுதல் மற்றும் கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு சம்பிரதாய மரியாதை தொடர்பான கடமைகளை 2024 மார்ச் 31 மற்றும் இன்று (2024 ஏப்ரல் 01) இலங்கை கடற்படை மூலம் இலங்கை விமானப்படைக்கு ஒப்படைக்கப்பட்டதுடன் இந் நிகழ்வுகள் காலி முகத்திடலில் மற்றும் விமானப்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
01 Apr 2024
மனிதாபிமான நடவடிக்கையின் போது ஊனமுற்ற கடற்படை வீரர்களுக்கு மின்சார சக்கர நாற்காலிகள் மற்றும் செயற்கை கால்கள் வழங்கப்பட்டன

மனிதாபிமான நடவடிக்கையில் பங்களித்து கால்களை இழந்த கடற்படை வீரர்களுக்கு செயற்கை கால்கள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் மேலும் மூன்று கடற்படை வீரர்களுக்கு செயற்கை கால்கள் மற்றும் மின்சார சக்கர நாற்காலியொன்று வழங்கும் நிகழ்வு 2024 மார்ச் 22 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் ஓயாமடுவ கடற்படை அதிகாரிகள் ஓய்வு விடுதி வளாகத்தில் நடைபெற்றது.
23 Mar 2024
கர்னல் ஷியாம் விதுருபொல (ஓய்வு) அவர்களினால் கடற்படை அதிகாரிகளுக்கு சிறப்பு ஊக்கமளிக்கும் உரையொன்று நடத்தப்பட்டது

இலங்கை கடற்படை அதிகாரிகளின் தொழில்முறை மற்றும் தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்துவதற்கான விசேட ஊக்கமளிக்கும் உரையொன்று 2024 மார்ச் மாதம் 20 ஆம் திகதி கர்னல் ஷியாம் விதுருபொல (ஓய்வு) அவர்களின் சமயோசிதத்துடன் வெலிசர Wave N' Lake நிகழ்வு மண்டபத்தில் நடத்த கடற்படை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்து கொண்டார்.
21 Mar 2024
சபுகஸ்கந்த பண்டைய ரஜமஹா விஹாரஸ்த ஸ்ரீ குணரத்ன தர்ம வித்தியாலயத்தினால் கடற்படைத் தளபதியை கௌரவிக்கப்பட்டது
சபுகஸ்கந்த பண்டைய ரஜமஹா விஹாரஸ்த ஸ்ரீ குணரத்ன தர்ம வித்தியாலயத்தின் பழைய மாணவர்களில் ஒருவரான கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, களனி பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த கற்கைகளின் சிரேஷ்ட பேராசிரியர் வணக்கத்திற்குரிய நாபிரித்தன் கடவல ஞானரத்ன தேரரின் தலைமையில் இன்று (17 மார்ச் 2024) சபுகஸ்கந்த பண்டைய ரஜமஹா விஹாரஸ்த ஸ்ரீ குணரத்ன தர்ம வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
17 Mar 2024
கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட 15 தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்கள் நோயாளர்களுக்கு விநியோகிப்பதற்காக கண்டி உயர்தர பெண்கள் பாடசாலைக்கு கையளிக்கப்பட்டன

இலங்கைக் கடற்படையில் சமூக நலத் திட்டத்தின் கீழ், கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட 15 தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்கள் 2024 மார்ச் மாதம் முதல் வாரத்தில் கண்டி உயர்தர பெண்கள் பாடசாலையின் ‘Interact Club’ சங்கத்திடம் கையளிக்கப்பட்டது.
11 Mar 2024
IORA தினம் கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

IORA தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, 'எதிர்கால தலைமுறைகளுக்கான நிலையான இந்தியப் பெருங்கடல்' (Sustainable Indian Ocean for Future Generations) என்ற தொனிப்பொருளின் கீழ், காலி முகத்துவாரத்தில் கடல் தொடர்பான நடவடிக்கைகள் உள்ளிட்ட கண்காட்சியொன்று இன்று (2024 மார்ச் 10) ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கை ஜனாதிபதி மற்றும் ஆயுதப்படைகளின் தளபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்துகொண்டார்.
10 Mar 2024
இலங்கை தொண்டர் கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நிலந்த ஹேவாவிதாரண பதவியேற்பு

இலங்கை தொண்டர் கடற்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் நிலந்த ஹேவாவிதாரண இன்று (2024 பிப்ரவரி 20) இலங்கை தொண்டர் கடற்படையின் தளபதியாக தொண்டர் கடற்படை தலைமையகத்தில் பதவியேற்றார்.
20 Feb 2024