நிகழ்வு-செய்தி
இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான 11வது பணியாளர் சந்திப்பு கொழும்பில் தொடங்கியது

இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையில் பதினொன்றாவது (11) முறையாக நடைபெறுகின்ற பணியாளர்கள் கலந்துரையாடல் அமர்வு (11th Navy to Navy Staff Talks – Indain Navy and Sri Lanka Navy) இன்று (2023 அக்டோபர் 17) கொழும்பு கலங்கரை விளக்க உணவகத்தில் தொடங்கியதுடன் இதற்கு இணையாக இந்திய கடற்படை தூதுக்குழுவின் தளபதி ரியர் அட்மிரல் Nirbhay Bapna (Assistant Chief of Naval Staff – Foreign Cooperation and Liaison) இன்று (2023 அக்டோபர் 17) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுடன் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை நடத்தினார்.
18 Oct 2023
இந்தியாவில் கென்ய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் உத்தியோகபூர்வ சந்திப்பு

இந்தியாவில், கென்ய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் Basil Mwambingu Mwakale இன்று (2023 அக்டோபர் 17) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.
18 Oct 2023
இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான ‘KRI BIMA SUCI - 945’ கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை விட்டு புறப்பட்டது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 அக்டோபர் 14 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான BAROUE CLASS வகையின் பயிற்சிக் கப்பல் ‘KRI BIMA SUCI - 945’ வெற்றிகரமாக தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து, இன்று (2023 அக்டோபர் 15) இலங்கை விட்டு புறப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினரின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.
16 Oct 2023
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘Brunswick’ கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை விட்டு புறப்பட்டது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 அக்டோபர் 11 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘Brunswick’ கப்பல் வெற்றிகரமாக தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து, இன்று (2023 அக்டோபர் 15) இலங்கை விட்டு புறப்பட்டுள்ளது.
15 Oct 2023
இந்தோனேசிய கடற்படையின் ‘KRI BIMA SUCI - 945’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான BAROUE CLASS வகையின் ‘KRI BIMA SUCI - 945’ என்ற பயிற்சிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 அக்டோபர் 14) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன் இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.
14 Oct 2023
காலி கலந்துரையாடல் 2023 சர்வதேச கடல்சார் மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை கடற்படை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் Geopolitical Cartographer (GC) நிருவனம் பதினொன்றாவது (11வது) முறையாக ஏற்பாடு செய்த காலி கலந்துரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு இலங்கை ஜனாதிபதி மற்றும் ஆயுதப்படைகளின் தளபதி திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா உட்பட இராஜதந்திர அதிகாரிகள், 42 நாடுகள் மற்றும் 11 சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல கடல்சார் பாதுகாப்பு அறிஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் பங்கேற்புடன் 2023 அக்டோபர் 12 ஆம் திகதி காலி ஜெட்விங் லைட்ஹவுஸ் ஹோட்டலில் ஆரம்பமானதுடன் இரண்டு நாட்களாக வெற்றிகரமாக நடைபெற்ற இந்த மாநாடு 2023 அக்டோபர் 13 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவுற்றது.
14 Oct 2023
காலி கலந்துரையாடல் 2023 சர்வதேச கடல்சார் மாநாடு காலியில் ஆரம்பமானது

இலங்கை கடற்படை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் Geopolitical Cartographer (GC) நிருவனம் பதினொன்றாவது (11வது) முறையாக ஏற்பாடு செய்கின்ற காலி கலந்துரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு இலங்கை ஜனாதிபதி மற்றும் ஆயுதப்படைகளின் தளபதி திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா உட்பட உள்நாட்டு, வெளிநாட்டு இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் பங்கேற்புடன் இன்று (அக்டோபர் 12, 2023) காலி ஜெட்விங் லைட்ஹவுஸ் ஹோட்டலில் ஆரம்பமானதுடன் Emerging New Order in the Indian Ocean என்ற தொனிப்பொருளின் கீழ், இரண்டு நாட்களாக (2023 அக்டோபர் 12-13) நடைபெறுகின்ற இந்த மாநாட்டில் 42 நாடுகள் மற்றும் 11 சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல கடல்சார் பாதுகாப்பு அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
13 Oct 2023
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘Brunswick’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘Brunswick’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 ஒக்டோபர் 11) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
11 Oct 2023
காலி உரையாடல் 2023 சர்வதேச கடல்சார் மாநாடு நாளை காலியில் ஆரம்பம்

இலங்கை கடற்படை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் Geopolitical Cartographer (GC) நிருவனம் இணைந்து பதினொன்றாவது (11வது) முறையாக ஏற்பாடு செய்கின்ற காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு இம் முறை இலங்கை ஜனாதிபதி திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா உட்பட பிரத்தியேக அதிதிகளின் பங்குபற்றுதலுடன் 2023 ஒக்டோபர் 12ஆம் திகதி காலி ஜெட்விங் லைட்ஹவுஸ் ஹோட்டலில் ஆரம்பமாகவுள்ளதுடன் அன்று முதல் இரண்டு நாட்களாக (அக்டோபர் 12-13, 2023) இந்த மாநாட்டை நடத்த கடற்படை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. Emerging New Order in the Indian Ocean என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த ஆண்டு நடைபெறுகின்ற மாநாட்டில், 44 நாடுகள் மற்றும் 11 சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், பாதுகாப்புத் துறையில் உள்ள தயாரிப்புகள் தொடர்பான நிறுவனங்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் பல கடல்சார் பாதுகாப்பு அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
11 Oct 2023
இலங்கை முப்படை மருத்துவ நிபுனர் சங்கத்தின் பங்களிப்புடன் சுகாதார முகாமொன்று மற்றும் பல சமூக சேவை திட்டங்கள் சேருவாவிலவில் நடத்தப்பட்டன

இலங்கை முப்படை மருத்துவ நிபுனர் சங்கம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே லயன்ஸ் கழகம் மற்றும் இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவு ஆகியவை இணைந்து 2023 ஒக்டோபர் 08 ஆம் திகதி சேருவாவில மங்கள ரஜமஹா விஹாரயத்தில் சுகாதார முகாமொன்று மற்றும் பல சமூக சேவை திட்டங்கள் நடத்தினர்.
11 Oct 2023