நிகழ்வு-செய்தி

Wave N’ Lake கடற்படை நிகழ்வு மண்டபம் வெலிசரவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையின் பல்வேறு சம்பிரதாய நிகழ்வுகளுக்காக மற்றும் அனைத்து கடற்படை வீரர்களின் நலனுக்காக வெலிசர கடற்படை வளாகத்தில் கடற்படை வீரர்களின் நிதி பங்களிப்பு மற்றும் கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் கட்டப்பட்ட Wave N’ Lake கடற்படை நிகழ்வு மண்டபம் 2023 ஒக்டோபர் 07 ஆம் திகதி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி திருமதி மாலா லமாஹேவா அவர்களின் பங்குபற்றுதலின் திறந்து செயற்பாட்டு நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

08 Oct 2023

கடற்படை தளபதியின் தலைமையில் "கமாண்டர் பிரேம்லால் தன்வத்த திரையரங்கை" திறந்து வைக்கப்பட்டது

ரோயல் இலங்கை கடற்படையின் மற்றும் இலங்கை கடற்படையின் இசைப் பணிப்பாளராக கடமையாற்றிய மறைந்த கமாண்டர் பிரேம்லால் தன்வத்த அவர்களுக்கு கடற்படையினால் அஞ்சலி செலுத்தும் வகையில் வெலிசர கடற்படை வளாகத்தில் உள்ள கடற்படை கலாசார நடன மண்டபத்தை "கமாண்டர் பிரேம்லால் தன்வத்த திரையரங்கம்" என்று பெயரிடப்பட்டு திறந்து வைக்கும் நிகழ்வு 2023 ஒக்டோபர் 07 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி திருமதி மாலா லமாஹேவா அவர்களின் பங்குபற்றுதலுடன் வெலிசர கடற்படை வளாகத்தில் நடைபெற்றது.

08 Oct 2023

இலங்கைக்கான தென் கொரியத் தூதுவர் கடற்படைத் தளபதியுடன் உத்தியோகபூர்வ சந்திப்பு

இலங்கைக்கான தென் கொரியத் தூதுவர் கௌரவ திருமதி மியோன் லீ அவர்கள் (Miyon Lee) இன்று (2023 ஒக்டோபர் 06) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

06 Oct 2023

பஹ்ரைனில் ஒருங்கிணைந்த கடல்சார் படைகளின் துணை கட்டளை அதிகாரி மற்றும் கடற்படைத் தளபதி இடையே அதிகாரப்பூர்வ சந்திப்பு

தற்போது உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பஹ்ரைனில் உள்ள ஒருங்கிணைந்த கடல்சார் படையின் (The Combined Maritime Forces – CMF) துணை கட்டளை அதிகாரி கொமடோர் பிலிப் எட்வர்ட் டெனிஸ் (Commodore Philip Edward Dennis - Royal Navy) அவர்கள் இன்று (2023 அக்டோபர் 02) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

02 Oct 2023

07 வைத்திய அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் இடம்பெற்றது

இலங்கை நிரந்தர கடற்படையின் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த ஏழு (07) மருத்துவ அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு 2023 செப்டெம்பர் 30 ஆம் திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் பிரதான பயிற்சி மைதானத்தில் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கட்டளைத் தளபதி கொமடோர் புத்திக லியனகமகேவின் தலைமையில் இடம்பெற்றது.

01 Oct 2023

அமெரிக்காவில் நடைபெறும் 25வது கடல்சார் சக்தி மாநாட்டில் இலங்கை கடற்படைத் தளபதி பங்கேற்ப்பு

2023 செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை அமெரிக்காவின் நியூபோர்ட், ரோட் தீவில் உள்ள அமெரிக்க கடற்படை போர் கல்லூரியில் (U.S. Naval War College) நடைபெற்ற 25 வது சர்வதேச கடல் சக்தி கருத்தரங்கில் (25th International Seapower Symposium - ISS) இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா பங்கேற்றார். அங்கு, அமெரிக்க கடற்படை நடவடிக்கைகளின் துணைத் தளபதி, அட்மிரல் Lisa M. Franchetti, அமெரிக்காவின் கடலோர காவல்படையின் தளபதி, அட்மிரல் Linda L. Fagan, அமெரிக்காவின் பசிபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் Samuel J. Paparo மற்றும் அமெரிக்க கடற்படைத் மத்திய கட்டளையின் தளபதி வைஸ் அட்மிரல் Brad Cooper உட்பட பிராந்திய மற்றும் பிராந்தியம் அல்லாத மாநிலங்களின் கடற்படைத் தலைவர்கள் மற்றும் கடலோரக் காவல் படைத் தலைவர்களுடன் உத்தியோகபூர்வ சந்திப்புகளில் பங்கேற்று, கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.

26 Sep 2023

இலங்கை கடற்படையினரின் பங்களிப்புடன் காலி முகத்திடல் கரையோரத்தில் மரம் நடும் நிகழ்ச்சியொன்று மேற்கொள்ளப்பட்டது

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கப்பல் நிறுவனம் இணைந்து காலி முகத்துவார கடற்கரையை மையமாக் கொண்டு மரம் நடும் நிகழ்ச்சியொன்று இன்று (2023 செப்டம்பர் 23) மேற்கொன்டுள்ளனர்.

23 Sep 2023

இந்திய கடற்படையின் ‘INS Nireekshak’ கப்பல் தனது அதிகாரப்பூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டு புறப்பட்டது

2023 செப்டெம்பர் 14 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தீவுக்கு வந்த இந்திய கடற்படையின் 'INS Nireekshak' கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 2023 செப்டம்பர் 21 ஆம் திகதி தீவை விட்டு வெளியேறியதுடன், இலங்கை கடற்படையினர் திருகோணமலை துறைமுகத்தில் கடற்படையினரின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

22 Sep 2023

சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு கடற்படையினரால் கரையோர சுத்திகரிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான திரு. சாகல ரத்நாயக்க மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோரின் ஆலோசனைக்கமைவாக இலங்கை கடற்படையினரால் செப்டம்பர் 16ஆம் திகதி துறைமுக நகரப் பகுதியின் கடற்கரையை சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு, இந்தப் பணிகள் அனைத்து கடற்படை கட்டளைகளும் உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

17 Sep 2023

இந்திய கடற்படையின் ‘INS Nireekshak’ போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான 'INS Nireekshak' என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 செப்டம்பர் 14) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்ததுடன் இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

14 Sep 2023