நிகழ்வு-செய்தி

கடல்சார் பேரழிவுகளுக்கு பதிலளிப்பதற்கான நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்துவது பற்றிய கலந்துரையாடலொன்று கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது

கடற்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்ட கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் தேடல் மற்றும் மீட்பு பணி மற்றும் கடலில் ஏற்படும் எந்தவொரு அவசரநிலைக்கும் பதிலளிக்கும் திறன் தொடர்பாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் கடற்படையின் துணைத் தளபதி மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்கவின் தலைமையில் 2023 செப்டம்பர் 06 ஆம் திகதி சிறப்பு கலந்துரையாடலொன்று கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது.

12 Sep 2023

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 16வது சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டில் கடற்படைத் தளபதி பங்கேற்றார்

டிஜிட்டல் மயமாக்கல், நிலைத்தன்மை மற்றும் துறை மாற்றம் மூலம் பின்னடைவை உருவாக்குதல் என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறுகின்ற கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 16வது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணி குழுவின் தலைமை அதிகாரியுமான திரு. சாகல ரத்நாயக்க அவர்களின் தலைமையில் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் (ஓய்வு) பங்கேற்புடன் 2023 செப்டெம்பர் 07 ஆம் திகதி குறித்த பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் தொடங்கியதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா குறித்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

08 Sep 2023

விஷம் மற்றும் அபாயகரமான போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக நிறுவப்பட்ட ஜனாதிபதி செயலணி கடற்படை தலைமையகத்தில் கூடியது

நாட்டில் விஷம் மற்றும் அபாயகரமான போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான விசேட கூட்டம் 2023 செப்டம்பர் 01 ஆம் திகதி விஷம் மற்றும் அபாயகரமான போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக நிறுவப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

06 Sep 2023

இலங்கை தொண்டர் கடற்படையின் வருடாந்த பயிற்சி முகாம் தொடங்கியது

இலங்கை தொண்டர் கடற்படையின் வருடாந்த பயிற்சி முகாம் 2023 செப்டெம்பர் 04 ஆம் திகதி வெலிசர தொண்டர் கடற்படைத் தலைமையகத்தில் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேரா தலைமையில் தொடங்கியது.

06 Sep 2023

கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா பதவியேற்பு

ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக இன்று (2023 செப்டம்பர் 03) குறித்த கட்டளைத் தலைமையகத்தில் பதவியேற்றார்.

04 Sep 2023

இந்திய கடற்படைக் கப்பல் ‘INS Delhi’ தனது உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டு புறப்பட்டது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 செப்டம்பர் 1 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த இந்திய கடற்படை கப்பல் ‘INS Delhi’ வெற்றிகரமாக தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து, இலங்கை கடற்படை கப்பல் விஜயபாகுவுடன் நடத்திய கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் இன்று (2023 செப்டம்பர் 03) தீவை விட்டு வெளியேறியது. இந்நிலையில், இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினரின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

03 Sep 2023

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக ரியர் அட்மிரல் தம்மிக்க குமார கடமைகளைப் பொறுப்பேற்றார்

ரியர் அட்மிரல் தம்மிக்க குமார ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது துணை வேந்தராக 2023 செப்டம்பர் 01 ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றார்.

02 Sep 2023

மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சமன் பெரேரா பதவியேற்பு

மேற்கு கடற்படை கட்டளையின் மற்றும் இலங்கை தொண்டர் கடற்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் சமன் பெரேரா இன்று (2023 செப்டம்பர் 01) மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.

01 Sep 2023

தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க பதவியேற்பு

ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக இன்று (2023 செப்டம்பர் 01) குறித்த கட்டளைத் தலைமையகத்தில் பதவியேற்றார்.

01 Sep 2023

இந்திய கடற்படையின் ‘INS Delhi’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Delhi’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 செப்டம்பர் 29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

01 Sep 2023