நிகழ்வு-செய்தி

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் உத்தியோகபூர்வ பிரியாவிடை சந்திப்பிற்காக கடற்படை தளபதியை சந்தித்தார்

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர், கர்னல் முஹம்மது சப்தர் கான் (Colonel Muhammad Safdar Khan) இன்று (06 ஜூலை 2023) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ பிரியாவிடை சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.

06 Jul 2023

இலங்கை கடற்படையின் சமூக நலத்திட்டம் மூலம் "கதிர்காமம் பாத யாத்திரை"க்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டன

2023 ஜூன் 10ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெற்ற கதிர்காமம் பாத யாத்திரையில் கலந்து கொண்ட பக்தர்களுக்காக இலங்கை கடற்படை சமூக நலத்திட்டத்தின் கீழ் யால லிங் துண பிரதேசத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று நிறுவப்பட்டதுடன் பக்தர்களின் குடி நீர் தேவைகளை இலகுவாகப் பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகளும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டன.

05 Jul 2023

இலங்கையின் மாலைதீவு உயர்ஸ்தானிகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் கௌரவ அலி ஃபைஸ் (Ali Faiz) அவர்கள் இன்று (2023 ஜூலை 04) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

05 Jul 2023

கடற்படை சேவைகளின் பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் பிரியால் விதானகே கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் பிரியால் விதானகே இன்று (2023 ஜூலை 04) கடற்படை தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நாயகம் சேவைகள் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

04 Jul 2023

நிரந்தரமாக ஊனமுற்ற ஓய்வுபெற்ற சிரெஷ்ட மாலுமிக்கு கடற்படையால் மின்சார சக்கர நாற்காலியொன்று நன்கொடையாக வழங்கப்பட்டது

குறிப்பிட்ட உடல்நிலை காரணமாக முற்றாக ஊனமுற்ற சிரேஷ்ட மாலுமி எம்.யு.எல். ஜயரத்னவுக்கு (ஓய்வு) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் 2023 ஜூலை 03 ஆம் திகதி கடற்படையால் வடிவமைக்கப்பட்ட மின்சார சக்கர நாற்காலியொன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வு எல்பிட்டிய பகுதியில் உள்ள மூத்த மாலுமியின் வீட்டில் இடம்பெற்றது.

04 Jul 2023

கடற்படைத் தளபதி கிழக்கு கடற்படை கட்டளையில் திருகோணமலை தெற்கு பகுதிக்கு உத்தியோகபூர்வ விஜயம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா 2023 ஜூலை 01 ஆம் திகதி கிழக்கு கடற்படைக் கட்டளைக்குட்பட்ட திருகோணமலை தெற்குப் பகுதிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு குறித்த பகுதியில் கடற்படை மற்றும் இலங்கை கடலோரக் காவல் திணைக்களத்தின் செயற்பாடுகள் மற்றும் நலன்புரி வசதிகளை அவதானித்தார். மேலும் கடற்படையின் செயல்பாட்டுத் தயார்நிலை, கால அவகாசம் மற்றும் சவால் முகாமைத்துவம் பற்றி குறித்து திருகோணமலை தெற்கு பிராந்திய அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு விளக்கமளித்தார்.

02 Jul 2023

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 35வது மற்றும் 36வது உள்வாங்கல்களின் தொழில்நுட்பக் கிளைகளைச் சேர்ந்த இருபத்திமூன்று அதிகாரிகள் அதிகாரத்தில் நியமிக்கப்பட்டனர்

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 35 மற்றும் 36 ஆவது ஆட்சேர்ப்பு தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த 23 அதிகாரிகள் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியின் பிரதான பயிற்சி மைதானத்தில் 2023 ஜூன் 30 ஆம் திகதி நடைபெற்ற பதவியேற்பு விழாவின் பின்னர் நிருவனங்களுக்கு சென்றனர். இந் நிகழ்வுக்காக திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்வியகத்தின் கட்டளைத் தளபதி கொமடோர் புத்திக லியனகமகேவின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா கலந்து கொண்டார்.

01 Jul 2023

கடற்படைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நேரடி நுழைவு அதிகாரிகள் மற்றும் கேடட் அதிகாரிகள் 67 பேர் கடற்படைத் தலைமையகத்தில் நியமனக் கடிதங்களைப் பெற்றனர்

இலங்கை கடற்படைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 65 வது கேடட் ஆட்சேர்ப்பின் அதிகாரிகள் முப்பத்தைந்து பேர் (35), தன்னார்வ கடற்படைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நேரடி நுழைவு அதிகாரிகள் இருபத்தி ஒன்பது பேர் (29) மற்றும் பல்கலைக்கழக ஆணைகளை பெற்ற மூன்று (03) கேடட் அதிகாரிகள் உட்பட 67 பேருக்கு இன்று (2023 ஜூன் 28) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் கடற்படைத் தலைமையகத்தில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

29 Jun 2023

கடற்படை வரலாற்றில் முதல் முறையாக, 2 பெண் அதிகாரிகள் மற்றும் 3 பெண் மாலுமிகள், அடிப்படை பாராசூட் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்

இலங்கை கடற்படை வரலாற்றில் இரண்டு பெண் அதிகாரிகள் (02) மற்றும் மூன்று பெண் மாலுமிகள் (03) அடங்கிய முதல் பெண் கடற்படை பாராசூட் குழு 2023 ஜூன் 21 ஆம் திகதி அம்பாறை விமானப்படை பாராசூட் பயிற்சி பாடசாலையில் தமது அடிப்படை பாராசூட் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

28 Jun 2023

கடற்படை மூலம் சதுப்புநில கன்றுகள் நடவு திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது

கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமார தலைமையில், ஆயிரம் (1000) சதுப்புநில மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியொன்று லங்காபடுன உல்லுக்கலை களப்பு பகுதியில் 2023 ஜூன் 26 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

27 Jun 2023