நிகழ்வு-செய்தி

கடற்படை மின் மற்றும் மின்னணு பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மின்னணு இதழின் ஏப்ரல் இதழ் வெளியிடப்பட்டது

இலங்கை கடற்படையின் மின் மற்றும் மின்னணு பொறியியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளை வெளிக்கொணர்ந்து பொறியியல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்பத் துறையில் தொழில்நுட்ப வல்லுநர்களின் எழுத்துத் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ‘Naval Electrical and Electronic Engineering & Technology (NEET)’ மின் இதழில் 2023 ஏப்ரல் இதழ் 2023 மே 23, ஆம் திகதி மின் மற்றும் மின்னணு பொறியியல் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் விராஜ் லீலாரத்ன தலைமையில் வெளியிடப்பட்டது.

24 May 2023

இலங்கை முப்படை மருத்துவ அறிவியலாளர்கள் சங்கம் மற்றும் இலங்கை மருத்துவ சங்கம் இணைந்து பிராந்திய கூட்டமொன்றை திருகோணமலையில் நடத்தியது.

இலங்கை முப்படை மருத்துவ அறிவியலாளர்கள் சங்கம் மற்றும் இலங்கை மருத்துவ சங்கம் இணைந்து 2023 மே 18 ஆம் திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் அட்மிரல் வசந்த கரண்னாகொட கேட்போர் கூடத்தில் ஒரு பிராந்திய கூட்டமொன்றை நடத்தியது.

21 May 2023

தேசிய போர்வீரர்கள் நினைவேந்தல் விழா அதிமேதகு ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது

2023 தேசிய போர்வீரர்கள் நினைவேந்தல் விழா, முப்படைகளின் சேனாதிபதி, அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் 2023 மே 19 ஆம் திகதி பத்தரமுல்லை படைவீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெற்றதுடன் இந் நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்து கொண்டார்.

20 May 2023

தென்கிழக்கு கடற்படை கட்டளையில் வெற்றிகரமாக இடம்பெற்ற இரத்த தானம் நிகழ்ச்சி

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூகப் பொறுப்புணர்வு திட்டமாக மேற்கொள்ளப்பட்ட இரத்த தானம் நிகழ்ச்சியொன்று 2023 மே 18 ஆம் திகதி தென்கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படை வீரர்களின் பங்கேற்புடன் கட்டளையின் பொது வைத்தியசாலையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

20 May 2023

உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, கடற்படை நடமாடும் பல் மருத்துவ சேவையொன்று நடத்தியது

2023 மார்ச் மாதம் 20 ஆம் திகதி ஈடுபட்டுள்ள உலக வாய் சுகாதார தினத்துடன் இணைந்து, இலங்கை கடற்படை பல் மருத்துவ சேவையினால் நடத்தப்படுகின்ற பல் மருத்துவ சேவைகளின் மற்றுமொரு பகுதியாக 2023 மே 9 முதல் 19 வரை தென்கிழக்கு கடற்படை கட்டளையில் நடமாடும் பல் சேவையொன்று வெற்றிகரமாக நடத்தியது.

20 May 2023

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் கடற்படை ஆலோசகர்கள், பிரியாவிடை மற்றும் அறிமுகத்திற்கான உத்தியோகபூர்வ சந்திப்புக்காக கடற்படை தளபதியை சந்தித்தனர்.

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் கடற்படை ஆலோசகராக செயல்படும் Lieutenant Commander RICHARD LISTER மற்றும் புதிய கடற்படை ஆலோசகராக நியமிக்கப்பட உள்ள Lieutenant Commander JESSICA V. DE MONT ஆகியோர் உத்தியோகபூர்வ பிரியாவிடை மற்றும் அறிமுக சந்திப்புக்காக இன்று (2023 மே 19), கடற்படைத் தலைமையகத்தில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்தனர்.

19 May 2023

கடற்படைத் தளபதி வெலிசரவில் உள்ள ஏங்கரேஜ் கடற்படை பராமரிப்பு மையத்திற்கு விஜயம்

தேசிய போர்வீரர் தினத்தை முன்னிட்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (18 மே 2023) வெலிசரவில் உள்ள ஏங்கரேஜ் கடற்படை பராமரிப்பு மையத்திற்குச் (Anchorage Naval Care Center) சென்று புனர்வாழ்வில் தங்கியிருக்கும் கடற்படை வீரர்களின் நலன்களைக் கேட்டறிந்தார். இந்த விஜயத்தின் போது கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி மாலா லமாஹேவா அவர்களும் கலந்துகொண்டார்.

18 May 2023

இலங்கையிலுள்ள சீன மக்கள் குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையிலுள்ள சீன மக்கள் குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான, சிரேஷ்ட கேர்ணல் Zhou Bo அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை இன்று (2023 மே 17) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

18 May 2023

இந்திய கடற்படையின் ‘INS Batti Malv’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Batti Malv’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2023 மே 16) காலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்ததுடன், வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

17 May 2023

கிழக்கு கடற்படை கட்டளையின் அதிகாரிகளுக்காக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன (ஓய்வு) சிறப்புரையாற்றினார்

கிழக்கு கடற்படை கட்டளை அதிகாரிகளின் அறிவை மேம்படுத்துவதற்கான அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட விரிவுரைகளின் தொடரில் ஆறாவது விரிவுரை ‘ Location, Location, and Location: Defence Diplomacy & Indo Pacific Strategies for Sri Lanka’ என்ற கருப்பொருளின் கீழ் இலங்கை கடற்படையின் 20வது தளபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புப் படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன (ஓய்வு) அவர்களால் 2023 மே 13 அன்று திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் அட்மிரல் வசந்த கர்ணகொட கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டது.

16 May 2023