நிகழ்வு-செய்தி
புதிய கடற்படைத் தளபதி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

இலங்கை கடற்படையின் 25வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார். இந்த சந்திப்பு கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (டிசம்பர் 19) இடம்பெற்றது.
20 Dec 2022
புதிய கடற்படைத் தளபதி கௌரவ ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கை கடற்படையின் 25வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கௌரவ ஜனாதிபதியும் ஆயுதப்படைகளின் தளபதியுமான ரணில் விக்கிரமசிங்க அவர்களை இன்று (2022 டிசம்பர் 19) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
20 Dec 2022
இலங்கை கடற்படை கலாசார இசைப் பிரிவின் நடன மற்றும் தாள வாத்தியம் இசை நிகழ்ச்சி பிரமாண்டமான முறையில் நடைபெற்றது

இலங்கை கடற்படையின் கலாசார இசைக்குழுவினால் வழங்கப்பட்ட வண்ணமயமான நடன மற்றும் தாள வாத்திய நிகழ்ச்சி 2022 நவம்பர் 29 ஆம் திகதி கொழும்பு 07, ராயல் மாஸ் எரீனா அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
05 Dec 2022
72 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் இஸ்லாமிய மத நிகழ்ச்சி கொழும்பு செத்தம் வீதி ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது

2022 டிசம்பர் 09 ஆம் திகதிக்கு ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 72 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடற்படையினருக்கு ஆசீர்வாதம் வழங்கும் தொடர் சமய நிகழ்ச்சிகளில் இஸ்லாமிய சமய நிகழ்ச்சி இன்று (2022 டிசம்பர் 02) கொழும்பு செத்தம் வீதி ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.
02 Dec 2022
72 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் இந்து மத நிகழ்ச்சி கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்றது

2022 டிசம்பர் 09 ஆம் திகதிக்கு ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 72 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் மத நிகழ்ச்சிகளின் இந்து மத நிகழ்ச்சி இன்று (2022 டிசம்பர் 01) கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் இந்து ஆலயத்தில் நடைபெற்றது.
02 Dec 2022
நாகதேவன்துறை கடற்படை முகாம் பாதுகாக்கும் நடவடிக்கையின் போது மற்றும் பூநகரியில் உயிரிழந்த கடற்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தானம் வழங்கப்பட்டது

1993 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகத்தேவன்துறை கடற்படை முகாமை மற்றும் பூநகரி கடற்படை முகாமை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையின் போது உயிரிழந்த 114 கடற்படை வீர்ர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் 2022 நவம்பர் 16 ஆம் திகதி யாழ்ப்பாணம் நாகத்தேவன்துறை கடற்படை முகாமில் இடம்பெற்றன.
17 Nov 2022
சட்டரீதியில் விலகாமல் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்காக 2022 நவம்பர் 15 முதல் 2022 டிசம்பர் 31வரை பொது மன்னிப்பு காலமொன்றை அறிவிக்கப்பட்டது.

மேலே உள்ள பொதுமன்னிப்பின் கீழ், சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்று தற்போது வெளிநாட்டில் இருக்கும் கடற்படை பணியாளர்களுக்கு மீண்டும் அறிக்கை செய்யாமல் உத்தியோகபூர்வமாக சேவையிலிருந்து வெளியேறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
15 Nov 2022
போர்வீரர்கள் ஞாபகார்த்த தினம் - 2022 பெருமையுடன் கொண்டாடப்பட்டது

தாய்நாட்டிற்காக உயிர்நீத்த அனைத்து போர் வீரர்களும் நினைவுகூறும் போர்வீரர்கள் ஞாபகார்த்த தினம் -2022 நிகழ்வுகளின் பிரதான நிகழ்வு கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படைவீர்கள் நினைவிடத்தில் இன்று ( 2022 நவம்பர் 13) நடைபெற்றதுடன் இந் விழாவில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் இந் நிகவுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.
13 Nov 2022
இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 72வது ஆண்டு நிறைவு விழாவின் ஆரம்பம் ஜய ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலி மஹா சேய மையமாக நடைபெற்றது

2022 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 72 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கஞ்சுக பூஜை மற்றும் கடற்படை கொடிகள் ஆசிர்வாதிக்கும் பூஜை இம்முறையும் கடற்படை பௌத்த சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நிகழ்வு 2022 நவம்பர் 09 ஆம் திகதி மற்றும் இன்று (2021 நவம்பர் 10) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் ருவன்வேலி மஹா சேய மற்றும் ஜெய ஸ்ரீ மகா போதி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி சந்திமா உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.
10 Nov 2022
ஐக்கிய இராச்சியத்தின் பிரதான நீர்வியலாளர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

ஐக்கிய இராச்சியத்தின் பிரதான நீர்வியலாளர் (National Hydrographer of the United Kingdom) ரியர் அட்மிரல் ரெட் ஹட்சர் (Rear Admiral Rhett Hatcher) உள்ளிட்ட குழுவினர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை 2022 நவம்பர் 08 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தனர்.
09 Nov 2022