நிகழ்வு-செய்தி
இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தின் பிரதித் தூதுவர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தின் பிரதித் தூதுவர் திரு. Aurélien Maillet அவர்கள் இன்று (2022 நவம்பர் 03) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்னவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
03 Nov 2022
ரியர் அட்மிரல் பிரசன்ன மஹவிதான கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்

35 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் பிரசன்ன மஹவிதான இன்று (2022 நவம்பர் 03) ஓய்வு பெற்றார்.
03 Nov 2022
இலங்கை கடற்படை கப்பல் படையணியுடன் இணைந்த P 627 ஆழ்கடல் கண்கானிப்பு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்காவின் சியாட்டில் துறைமுகத்தில் இருந்து 2022 செப்டம்பர் 03 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு தனது பயணத்தை தொடங்கிய அமெரிக்க கடலோர காவல்படை திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட P627 ஆழ்கடல் கண்கானிப்பு கப்பல் பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் சுமார் 10656 கடல் மைல்கள் (சுமார் 19734 கி.மீ) நீண்ட பயணத்திற்குப் பிறகு இன்று (2022 நவம்பர் 02) காலை கொழும்பு துறைமுகத்தை அடைந்தது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் அழைப்பின் பேரில் குறித்த கப்பலை வரவேற்கும் நிகழ்வுக்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித பண்டார தென்னகோன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கௌரவ ஜூலி சங், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே, இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன உட்பட கௌரவ அதிதிகள் கலந்து கொண்டனர்.
02 Nov 2022
கடற்படை சேவா வனிதா பிரிவின் சேவைகள் விரிவுபடுத்தப்படும்

கடற்படை சேவா வனிதா பிரிவின் கெளரவத் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்தின்படி, கடற்படையினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக, வெலிசறையில் நிறுவப்பட்ட சேவா வனிதா அழகு நிலையம், மலர் அலங்கார அலகு மற்றும் பதிக் உற்பத்தி நிலையம் ஆகியவற்றின் சேவைகள் பொது மக்களும் சலுகை விலையில் பெற்றுக்கொடுக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
01 Nov 2022
தனமல்வில, கித்துல்கொடே இரத்தின சதஹம் தியான நிலையத்தில் வருடாந்த கடின பிங்கம கடற்படையினரின் பங்களிப்புடன் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றது.

தனமல்வில, கித்துல்கொடே இரத்தின சதஹம் தியான நிலையத்தில் வருடாந்த கதின பிங்கம இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவின் பங்களிப்புடன் 2022 ஒக்டோபர் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
31 Oct 2022
கடற்படையினருக்கு பணம் கொடுத்து தப்ப முயன்றவர்களை கைது செய்த கடற்படை வீரர்களுக்கு கடற்படை தளபதியின் பாராட்டு

திருகோணமலை புல்முடை ஜின்னபுரம் கடற்பரப்பில் 2022 ஒக்டோபர் 26 ஆம் திகதி வெடிமருந்துகளை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மூன்று (03) சந்தேக நபர்கள் மீதான குற்றச்சாட்டை கைவிடுவதற்கு கடற்படையினருக்கு பணம் கொடுக்க வந்த இருவரை (02) கைது செய்த கடற்படை வீரர்களின் சேவையைப் பாராட்டி, இன்று (2022 ஒக்டோபர் 28,) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படைத் தலைமையகத்தில் பாராட்டுக் கடிதங்களை வழங்கினார்.
28 Oct 2022
Indo-Pacific Endeavour 2022 இல் பங்கேற்ற ராயல் அவுஸ்திரேலிய கடற்படை போர்க்கப்பல்கள் இலங்கை கடற்படையுடன் நடத்திய கடற்படை பயிற்சிக்குப் பிறகு தீவை விட்டு புறப்பட்டது

Indo-Pacific Endeavour 2022 இல் பங்கேற்பதற்காக 2022 அக்டோபர் 25, ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ராயல் ஆஸ்திரேலிய கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்களான எச்.எம்.ஏ.எஸ் எடிலேட் (HMAS Adelaide) மற்றும் எச்.எம்.ஏ.எஸ் என்ஸாக் (HMAS ANZAC) ஆகிய கப்பல்கள் இலங்கை கடற்படை கப்பல் சயுரல மற்றும் சிந்துரலவுடன் நடத்திய கூட்டு கடற்படை பயிற்சிக்குப் பிறகு 2022 அக்டோபர் 26 ஆம் திகதி தீவை விட்டு புறப்பட்டது.
27 Oct 2022
Indo-Pacific Endeavour 2022 இல் பங்கேற்கும் 02 ராயல் அவுஸ்திரேலிய கடற்படை போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன

Indo-Pacific Endeavour 2022 பயிற்சியில் பங்கேற்கும் ராயல் அவுஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான எச்.எம்.ஏ.எஸ் எடிலேட் (HMAS Adelaide) மற்றும் எச்.எம்.ஏ.எஸ் என்ஸாக் (HMAS ANZAC) ஆகிய இரண்டு போர்க்கப்பல்கள் இன்று (2022 அக்டோபர் 25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன, வருகை தந்த கப்பல்களை இலங்கை கடற்படையினர் கடற்படை பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.
25 Oct 2022
P 627 என்ற ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல் இலங்கை நோக்கிச் செல்லும் வழியில் சிங்கப்பூரின் சாங்கி (Changi) துறைமுகத்தை வந்தடைந்தது

2022 செப்டம்பர் 03 ஆம் திகதி அமெரிக்காவின் சியாட்டில் துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு தனது பயணத்தைத் தொடங்கிய P627 ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல், 2022 அக்டோபர் 22 ஆம் திகதி காலை சிங்கப்பூரில் உள்ள சாங்கி துறைமுகத்திற்கு வந்தடைந்தது. இந்த நிகழ்வில் சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் திருமதி சசிகலா பிரேமவர்தனவும் கலந்து கொண்டார்.
23 Oct 2022
248 ஆம் ஆட்சேர்ப்பின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 238 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர மற்றும் தொண்டர் கடற்படையின் 248 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 238 கடற்படை வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2022 அக்டோபர் 22 ஆம் திகதி திருகோணமலை, சாம்பூர் இலங்கை கடற்படை கப்பல் விதுர நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.
23 Oct 2022