நிகழ்வு-செய்தி

‘Trinco Dialogue - 2022’ கடல்சார் மாநாடு வெற்றிகரமாக திருகோணமலையில் நடைபெற்றது

‘Trinco Dialogue - 2022’ கடல்சார் மாநாடு திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் அட்மிரல் வசந்த கரன்ணாகொட கேட்போர் கூடத்தில் 2022 ஒக்டோபர் 21 ஆம் திகதி கடற்படையின் பிரதிப் பிரதானி மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

23 Oct 2022

ரியர் அட்மிரல் சுஜீவ செனவிரத்ன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்

34 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் சுஜீவ செனவிரத்ன இன்று (2022 ஒக்டோபர் 21) ஓய்வு பெற்றார்.

21 Oct 2022

இலங்கை கடற்படை கப்பல் சிக்‌ஷா நிறுவனத்தின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான உட்கட்டமைப்புகள் விரிவுபடுத்தப்படும்

இலங்கை கடற்படையின் ஆரம்பநிலை பயிற்சி நிலையங்களில் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பை விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தின் பிரகாரம், பூனேவைஇலங்கை கடற்படை கப்பல் சிக்‌ஷா நிறுவனத்தில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கல்வி கட்டிடம் இன்று (2022 அக்டோபர் 07) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

07 Oct 2022

தெற்கு கடற்படை கட்டளை வைத்தியசாலையில் நிறுவப்பட்ட தீவிரக் கண்காணிப்புப் பிரிவு (High Dependency Unit- HDU) திறக்கப்பட்டது

இலங்கை கடற்படையின் தொழிநுட்ப பங்களிப்பும் தொண்டு நிறுவனங்களின் ஆதரவு மற்றும் நன்கொடைகளுடன், காலி, பூஸ்ஸ தெற்கு கடற்படை கட்டளை வைத்தியசாலையில் நிறுவப்பட்ட தீவிரக் கண்காணிப்புப் பிரிவு (High Dependency Unit- HDU), கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில், 2022 அக்டோபர் 05 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

06 Oct 2022

கடற்படையின் பங்களிப்புடன் அபிவிருத்தி செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை மொரயாய மஹா வித்தியாலயத்தில் வசதிகள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினரால் அபிவிருத்தி செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை மொரயாய மஹா வித்தியாலயத்தில் வகுப்பறை கட்டிட வசதிகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் இன்று (2022 ஒக்டோபர் 05) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

05 Oct 2022

இந்தியாவில் உள்ள கொரிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான பாதுகாப்பு ஆலோசகராக இந்தியாவில் உள்ள கொரிய தூதரகத்தில் பணிபுரியும் லெப்டினன்ட் கேர்ணல் ஹான் ஜொங்ஹுன், (Lt. Col Han Jonghun) இன்று (2022 அக்டோபர் 04) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்னவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

04 Oct 2022

பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் பிரதிநிதிகள் கடற்படை தலைமையகத்திற்கு விஜயம்

குரூப் கேப்டன் அமீன் கான் (Group Captain Amin Khan) தலைமை கொண்ட பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் மாணவ அதிகாரிகளும் கல்விப் பணியாளர்களும் அடங்கிய 43 பேர் கொண்ட குழுவினர் 2022 அக்டோபர் 03 ஆம் திகதி கடற்படை தலைமையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

04 Oct 2022

P 627 என்ற ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல் இலங்கை நோக்கிச் செல்லும் வழியில் குவாமில் உள்ள அப்ரா துறைமுகத்தை வந்தடைந்தது.

அமெரிக்காவின் சியாட்டில் துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு 2022 செப்டம்பர் 03, அன்று தனது பயணத்தைத் தொடங்கிய P627 ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல், 2022 அக்டோபர் 02, அன்று அமெரிக்காவின் குவாமில் (Guam) உள்ள அப்ரா (Apra) துறைமுகத்தை வந்தடைந்தது.

03 Oct 2022

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவில் விசேட நிகழ்ச்சிகள்

வருடாந்தம் ஒக்டோபர் 01 ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படையினர் 2022 ஒக்டோபர் 02 ஆம் திகதி சிறுவர்களுக்கான விசேட நிகழ்ச்சியொன்றை இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவில் ஏற்பாடு செய்திருந்தனர்.

03 Oct 2022

247 ஆம் ஆட்சேர்ப்பின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 333 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர மற்றும் தொண்டர் கடற்படையின் 247 ஆம் ஆட்சேர்ப்புக்கான 333 கடற்படை வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2022 அக்டோபர் 01 ஆம் திகதி பூனாவை இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

02 Oct 2022