நிகழ்வு-செய்தி
கடற்படை தளபதி பதில் பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, 2022 செப்டெம்பர் 28 ஆம் திகதி, பதில் பாதுகாப்பு அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான கௌரவ பிரமித பண்டார தென்னகோனை அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் சந்தித்தார்.
29 Sep 2022
திருகோணமலை சாம்பூரில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இறங்குதுறை திறந்து வைக்கப்பட்டுள்ளது

திருகோணமலை தெற்கு கடல் பகுதியில் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில், சாம்பூரில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் விதுர நிருவனத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 'மரைன் பியர்' (Marine Pier) என்ற சிறிய படகுகள் நிருத்தும் இறங்குதுறை 2022 செப்டெம்பர் 26 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்னவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
28 Sep 2022
கடற்படை வரலாற்றில் முதல் முறையாக, அடிப்படை சுழியோடிகளுக்கான பயிற்சிநெறியை முடித்த பெண் மாலுமிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படை வரலாற்றில் முதல் தடவையாக அடிப்படை சுழியோடிகளுக்கான பயிற்சிநெறியை வெற்றிகரமாக முடித்த மூன்று (03) பெண் பணியாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 2022 செப்டெம்பர் 24 ஆம் திகதி கடற்படை கப்பல்துறையில் தளபதி கொமடோர் டேமியன் பெர்னாண்டோ தலைமையில் திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் உள்ள கடற்படையின் சுழியோடுதல் பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது.
26 Sep 2022
தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் முதல் தேசிய பாதுகாப்பு பாடநெறியை முடித்த கடற்படை அதிகாரிகள், தமது புதிய நியமனங்களைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னதாக கடற்படைத் தளபதியை சந்தித்தனர்.

கொழும்பு தேசிய பாதுகாப்பு கல்லூரியால் நடத்தப்பட்ட முதலாவது தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள் பாடநெறியை வெற்றிகரமாக முடித்த கடற்படை அதிகாரிகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை இன்று (2022 செப்டெம்பர் 23) கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தனர். குறித்த பாடநெறியின் சம்பிரதாயமான பட்டமளிப்பு நிகழ்வு கடந்த 2022 செப்டம்பர் 14 ஆம் திகதி கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.
24 Sep 2022
மேல் மாகாண 24 வயதுக்குட்பட்ட ஏழு உறுப்பினர்கள் கொண்ட ரக்பி சாம்பியன்ஷிப் மற்றும் இன்டர்-கிளப் நிப்பான் ரக்பி லீக் கோப்பை கடற்படை வென்றது

மேல் மாகாண 24 வயதுக்குட்பட்ட ஏழு உறுப்பினர்கள் கொண்ட ரக்பி சாம்பியன்ஷிப் மற்றும் இன்டர்-கிளப் முதல் தர 2021/2022 நிப்பான் பெயிண்ட் ரக்பி கோப்பை கடற்படை ரக்பி அணிகள் வென்றன, மேலும் வெற்றி பெற்ற ரக்பி அணிகளின் தலைவர்கள் ரக்பி கோப்பை இன்று (செப்டம்பர் 21, 2022) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை விளையாட்டு வாரியத்தின் தலைவர் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்னவிடம் வழங்கினார்கள்.
22 Sep 2022
‘சயுருசர’ வின் 45 வது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது

கடற்படை ஊடகப் பிரிவினால் வெளியிடப்படுகின்ற சயுருசர சஞ்சிகையின் 45வது பதிப்பு அதன் பிரதம ஆசிரியர் லெப்டினன்ட் கமாண்டர் (தன்னார்வ) எஸ்.ஆர்.சுதுசிங்கவினால் இன்று (2022 செப்டம்பர் 21) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவிடம் வழங்கப்பட்டது.
22 Sep 2022
இந்தியாவில் ராயல் நெதர்லாந்து தூதரகத்தில் உள்ள இலங்கையின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான பாதுகாப்பு ஆலோசகராக இந்தியாவில் உள்ள நெதர்லாந்து அரச தூதரகத்தில் பணிபுரியும் கப்டன் ரொபேர்ட் வான் புரூன்ஸ்சன் (Captain Robert van Bruinssen) இன்று (2022 செப்டம்பர் 21) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்னவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
21 Sep 2022
மிகவும் பிரபலமான மற்றும் சிறந்த அரசாங்க வலைத்தளமாக கடற்படை வலைத்தளம் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது

‘LK Domain Registry’ நிருவனம் மூலம் நடத்தப்பட்ட 'BestWeb.lk 2022' போட்டித்தொடரில், பிரபலமான அரசாங்க இணையதளங்கள் வகையின் கீழ் தங்கப் பதக்கத்தையும், சிறந்த அரசாங்க வலைத்தளப் பிரிவின் கீழ் வெண்கலப் பதக்கத்தையும் இலங்கை கடற்படையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் வென்றுள்ளது. அதற்காக கடற்படைக்கு வழங்கப்பட்ட விருதுகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவிடம் வழங்கும் நிகழ்வு கடற்படைத் தலைமையகத்தில் 2022 செப்டம்பர் 20 ஆம் திகதி இடம்பெற்றது.
21 Sep 2022
தேசிய பாதுகாப்பு பாடநெறி தொடர்பான சின்னம் கடற்படை தளபதிக்கு வழங்கல்

இலங்கை தேசிய பாதுகாப்புக் கல்லூரியின், தேசிய பாதுகாப்பு பாடநெறியை பூர்த்தி செய்த முப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்காக முதன்முறையாக நிர்மானிக்கப்பட்ட உத்தியோகபூர்வ சின்னத்தை பாதுகாப்புக் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் (ஓய்வு) அமல் கருணாசேகர அவர்களினால் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு 2022 செப்டெம்பர் 16 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
19 Sep 2022
பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபேத் மகாராணியின் மறைவுக்கு இலங்கை கடற்படையின் அஞ்சலி

பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபேத் மகாராணியின் 70 ஆண்டுகால ஆட்சிக் காலத்தின் போது இலங்கை கடற்படையின் படிப்படியான வளர்ச்சிக்காக பிரித்தானிய அரச கடற்படையால் வழங்கப்பட்ட நீண்டகால ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பின் வரலாற்றை நினைவுகூறும் நிலையில், 2022 செப்டெம்பர் 08 ஆம் திகதி காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இலங்கை கடற்படை தனது உயரிய அஞ்சலியை செலுத்துகிறது.
18 Sep 2022