நிகழ்வு-செய்தி
கடற்படைத் தளபதி கௌரவ பிரதமரை சந்தித்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை இன்று (2022 ஜூன் 15,) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.
15 Jun 2022
கடற்படையின் சேவா வனிதா பிரிவு பொசன் போயா தினத்தை முன்னிட்டு சமய நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.

மிஹிந்து தேரர் இலங்கைக்கு வந்ததை நினைவு கூறும் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 2022 ஜூன் 14 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன அவர்களின் தலைமையில் சில் வைபவம் நிகழ்வு இடம்பெற்றதுடன் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன அவர்களின் அழைப்பின் பேரில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகதென்ன அவர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.
15 Jun 2022
கொச்சிக்கடை புனித அந்தோனியாரின் வருடாந்த திருவிழாவுக்கு கடற்படையின் உதவி

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா 2022 ஜூன் 13 ஆம் திகதி காலை கொழும்பு பேராயர் மேதகு மெல்கம் கார்தினல் ரஞ்சித் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. பெருந்தொகையான கத்தோலிக்க பக்தர்கள் கலந்துகொண்ட இந்த ஆன்மிக விழாவை நடத்துவதற்கு இலங்கை கடற்படையினர் தமது உதவிகளை வழங்கினர்.
13 Jun 2022
ஐரோப்பிய ஒன்றியத்தால் நடத்தப்படும் திறன் வளர்ப்பு பயிற்சி திட்டம் கடற்படை தலைமையகத்தில் தொடங்குகிறது

ஐரோப்பிய ஒன்றியத்தின், விரிவான இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆபத்தான கடல் வழித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் (Critical Maritime Route Wider Indian Ocean – CRIMARIO II) கீழ் இந்திய-பசிபிக் பிராந்திய தகவல் பகிர்வு திட்டம் (Indo-Pacific Regional Information Sharing - IORIS) மூலம் கடற்படை தலைமையகம் மற்றும் கடற்படை கட்டளைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 14 பணியாளர் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் 2022 ஜூன் 06 ஆம் திகதி கொழும்பு கலங்கரை விளக்க உணவகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
07 Jun 2022
பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

எயார் கொமடோர் அக்தார் இம்ரான் சதோசாய் (Air Commodore Akhtar Saddozai) தலைமையிலான பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை இன்று (2022 ஜூன் 07) கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தனர்.
06 Jun 2022
புதிய இராணுவத் தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கை இராணுவத்தின் 24ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜெனரால் விகும் லியனகே இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை கடற்படைத் தலைமையகத்தில் இன்று (ஜூன் 06, 2022) சந்தித்தார்.
06 Jun 2022
சிறப்பு படகுகள் படைப் பயிற்சியை நிரைவு செய்த கடற்படை வீரர்களுக்கு கடற்படைத் தளபதியின் தலைமையில் சின்னங்கள் அணிவிக்கப்பட்டது

சிறப்பு படகுகள் படைப்பிரிவில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 29 ஆவது படைப்பிரிவின் மூன்று அதிகாரிகள் மற்றும் 19 மாலுமிகளுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (2022 ஜூன் 05) திருகோணமலை கடற்படைத் தளத்தில் வைத்து அவர்களின் சின்னங்களை வழங்கி வைத்தார்.
05 Jun 2022
ரிம் ஒப் த பெசிபிக் - 2022 (RIMPAC) பலதரப்பு கடல்சார் பயிற்சிக்காக கடற்படை குழுவொன்று தீவை விட்டு வெளியேறியது

அமெரிக்க கடற்படையின் பசிபிக் கப்பல் குழுவால் (US Pacific Fleet) நடத்தப்படும் Rim of the Pacific 2022 (RIMPAC 2022) பலதரப்பு கடல்சார் பயிற்சியில் பங்கேற்க 50 அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் அடங்கிய இலங்கை கடற்படைக் குழு இன்று காலை (ஜூன் 04, 2022) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ரோயல் அவுஸ்திரேலிய விமானப்படையின் விசேட விமானத்தில் அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்டது. அங்கு ரோயல் அவுஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான கென்பரா (HMAS Canberra) கப்பலின் உறுப்பினர்களுடன் இனைந்து இலங்கை கடற்படை மரைன் படையணி இரண்டு வார பயிற்சியின் பின்னர் அமெரிக்கா, ஹவாய் மற்றும் தெற்கு கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் RIMPAC 2022 கடல்சார் பயிற்சியில் பங்கேற்கும்.
04 Jun 2022
கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அரந்தலாவ சர்வதேச பௌத்த நிலையத்தில் மற்றும் கலேவெல, இஹல திக்கல ஆரம்பக் கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்ட இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2022 ஜூன் 02 ஆம் திகதி மற்றும் இன்று (2022 ஜூன் 03) பாடசாலை மாணவர்களின் மற்றும் பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
03 Jun 2022
கடற்படை தாதி கல்லூரியில் பாடநெறி முடித்த 30 தாதி மாணவர்கள் தாதி உறுதிமொழி வழங்கினார்கள்

சர் ஜான் கோத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட வெலிசர இலங்கை கடற்படை கப்பல் தக்ஷிலா நிறுவனத்தில் நிருவப்பட்ட கடற்படை தாதி கல்லூரியில் 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பின் 30 கடற்படை மற்றும் விமானப்படை தாதிகளின் பதவியேற்பு விழா இன்று (2022 மே 26) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிறுவனத்தில் இடம்பெற்றது.
28 May 2022