நிகழ்வு-செய்தி
இலங்கை கடற்படை "க்ளீன் ஶ்ரீ லங்கா" குடிமக்கள் உறுதிமொழி வழங்கி 2025 ஆண்டின் கடமைகளை ஆரம்பித்தது

இன்று காலை (2025 ஜனவரி 01), கடற்படைத் தலைமையகம் மற்றும் அனைத்து கடற்படை நிறுவனங்களிலும் கப்பல்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடிதை தொடர்ந்து, இலங்கை கடற்படை "க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய நிகழ்ச்சியில் குடிமக்கள் உறுதிமொழியை நேரலையில் வழங்கினர். அதன் பின்னர் புதிய ஆண்டில், வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.
01 Jan 2025
காலி முகத்திடளில் தேசிய கொடியை ஏற்றுதல் மற்றும் ஜனாதிபதி மாளிகையின் விசேட சம்பிரதாய மரியாதை தொடர்பான கடமைகளை கடற்படையினர் பொறுப்பேற்றனர்

காலி முகத்திடளில் தேசியக் கொடி ஏற்றுதல் மற்றும் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் விசேட சம்பிரதாய மரியாதை தொடர்பான கடமைகள் 2024 டிசம்பர் 31 ஆம் திகதி மற்றும் இன்று (01 ஜனவரி 2025) ஆகிய இரு தினங்களில் இலங்கை இராணுவத்திடம் இருந்து கடற்படையினரிற்கு காலி முகத்திடல் மற்றும் கொழும்பில் உள்ள கடற்படை தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டது. .
01 Jan 2025
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் மூலம் பொலன்னறுவை மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டது

சுகாதார அமைச்சின் முயற்சியால், அவுட்ரேவ் ப்ராஜெக்ட்ஸ் கியாரண்டி லிமிடெட் நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டில், கடற்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின், சமூகப் பணி செயல்திட்டத்தில் தயாரிக்கப்பட்ட 1074 மற்றும் 1075 வது இரண்டு (02), (RO) Plants நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை நிறுவும் சிறப்புத் திட்டத்தின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தின் இரண்டு (02) இடங்களான அலஹெர பிரதேச செயலாளர் பிரிவில், யாய 06, மேல் பகுதி, பெதுமெல கிராமத்திலும், கல்முல்ல, மல்வவாய, பகமூனையிலும் 2024 டிசம்பர் 31 அன்று நிறுவப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
31 Dec 2024
புதிய கடற்படைத் தளபதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை சந்தித்தார்

இலங்கை கடற்படையின் 26வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட இன்று (2024 டிசம்பர் 31) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டாவை (ஓய்வு பெற்ற) பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.
31 Dec 2024
அட்மிரல் பிரியந்த பெரேரா கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்

இலங்கை கடற்படையின் 25 ஆவது கடற்படைத் தளபதியாக கடமையாற்றிய அட்மிரல் பிரியந்த பெரேரா, தனது 37 வருட சேவையை நிறைவு செய்து இன்றுடன் (2024 31 டிசம்பர்) ஓய்வு பெற்றார்.
31 Dec 2024
இலங்கை கடற்படையின் 26வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட

இலங்கை கடற்படையின் 26வது கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவை இன்று (2024 டிசம்பர் 31) இராணுவத் தளபதியும், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவருமான திரு. அனுரகுமார திசாநாயக அவர்கள் நியமித்த்தன் பின்னர், அவர் வைஸ் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அதன்படி, இன்று (2024 டிசம்பர் 31) முற்பகல், கடற்படைத் தலைமையகத்தின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்கள் கடற்படைத் தளபதியின் வாளை கடற்படைத் தளபதிக்கு வழங்கி, கடற்படைத் தலைமையகத்தில் புதிய கடற்படைத் தளபதியிடம் கடமைகளை ஒப்படைத்த்துடன், கடற்படைத் தலைமையகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறைப்படி நடைப்பெற்ற விசேட நிகழ்வின் மூலம் புதிய கடற்படைத் தளபதிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
31 Dec 2024
கடற்படை வீரர்களின் நலன்கருதி வெலிசர கடற்படை வளாகத்தின் விரிவாக்கப்பட்ட வசதிகள், கடற்படைத் தளபதியின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக, வெலிசர கடற்படை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஹொக்கி மைதானம், சேவா வனிதா பயன்பாட்டு கட்டிடம் மற்றும் கடற்படை வீர்ர்களின் திருமணமானவர்களின் குடியிருப்பு உள்ளிட்ட வசதிகள் கடற்படை தளபதியினால் இன்று (2024 டிசம்பர் 30) திறந்து வைக்கப்பட்டது. கடற்படை தளபதி மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் கெளரவத் தலைவி திருமதி மாலா லமாஹேவா ஆகியோரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
30 Dec 2024
இந்தோனேசியக் கடற்படைக் கப்பல் ‘KRI SULTAN ISKANDAR MUDA-367’ தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இலங்கையில் இருந்து புறப்பட்டது

2024 டிசம்பர் மாதம் 28ம் திகதி அன்று உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இலங்கைக்கு வந்த இந்தோனேசிய கடற்படையின் SIGMA - CORVETTE ரகக் கப்பலான 'KRI SULTAN ISKANDAR MUDA-367', உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு (2024 டிசம்பர் 30) தீவிலிருந்து புறப்பட்டதுடன், குறித்த கப்பலிற்கு இலங்கை கடற்படையினரால் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையின் மரபுப்படி கப்பலுக்கு பிரியாவிடையளித்தனர்.
30 Dec 2024
'சயுருசர' இதழின் 49வது இதழ் வெளியிடப்பட்டது

கடற்படை ஊடகப் பணிப்பாளர் சபையினால் வெளியிடப்படும் 'சயுருசர' சஞ்சிகையின் 49வது இதழ் கடற்படைத் தளபதி அட்மிரல் பிரியந்த பெரேராவிடம் அதன் பிரதம ஆசிரியர் கமாண்டர் (ஸ்வே) சாலிய சுதுசிங்கவினால் இன்று (2024 டிசம்பர் 30) கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
30 Dec 2024
கொமடோர் பிரதீப் கருணாதிலக மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் பதில் பணிப்பாளர் நாயகமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை கடற்படையின் மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் பதில் பணிப்பாளர் நாயகமாக கொமடோர் பிரதீப் கருணாதிலக இன்று (2024 டிசம்பர் மாதம் 30) கடற்படைத் தலைமையகத்தில் உள்ள மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் பணிப்பாளர் நாயகத்தின் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
30 Dec 2024