நிகழ்வு-செய்தி

கடற்படையின் பங்களிப்புடன் கம்பஹ, வெரெல்லவத்த பகுதியில் கட்டப்படுகின்ற கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்தின் முதல் கட்டம் திறந்து வைக்கப்பட்டது

தற்போதுள்ள கோவிட் 19 அபாயத்தை எதிர்கொண்டு சுகாதாரத் துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்க திட்டங்களுக்கு ஆதரவாக கம்பஹ, வெரெல்லவத்த பகுதியில் மூடப்பட்ட தொழிற்சாலை யொன்று கடற்படையின் பங்களிப்பால் கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையமொன்றாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன் 650 படுக்கைகள் கொண்ட இந்த சிகிச்சை மையத்தின் முதல் கட்டத்தை 2021 ஜூன் 07 ஆம் திகதி சுகாதார அமைச்சர் கெளரவ பவித்ரா வன்னியராச்சி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

08 Jun 2021

நாளந்தா கல்லூரியின் 85 வது பழைய சிறுவர் சங்கத்தினால் பூஸ்ஸ இடைநிலை சிகிச்சை மையத்திற்கு பல பொறுட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன

கடற்படையால் பராமரிக்கப்படும் பூஸ்ஸ கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்தின் பயன்பாட்டிற்கான பொருட்களை நாளந்தா கல்லூரியின் 85 வது பழைய சிறுவர் சங்கத்தினால் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரசன்ன ஹெவகேவிடம் வழங்கும் நிகழ்வு 2021 ஜூன் 03 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் இடம்பெற்றது.

04 Jun 2021

வெளிச்செல்லும் ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பு தூதரகத்தில் இராணுவம், விமானம் மற்றும் கடற்படை பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து ஓய்வு பெறவிருக்கும் கர்னல் டெனிஸ் ஐ ஸ்கோடா (Colonel Denis I. Shkoda) அவர்கள் இன்று (2021 ஜூன் 03) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

03 Jun 2021

சேவா வனிதா பிரிவு மூலம் கிழக்கு கடற்படை கட்டளையில் இரத்த தான நிகழ்வொன்று நடத்தப்பட்டது

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்துப் படி கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி 2021 மே 24 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வுக்கு இணையாக கிழக்கு கடற்படை கட்டளையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வு துனை தலைமை அதிகாரி மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் வய்.என்.ஜெயரத்னவின் பங்கேற்புடன் இன்று (2021 மே 30) இலங்கை கடற்படை கப்பல் 'திஸ்ஸ' சேவா வனிதா முன்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

30 May 2021

கடற்படை விளையாட்டு வீராங்கணி டெஹானி எகொடவெல 2020 டோக்கியோ ஒலிம்பிக் பொட்டித்தொடருக்கு தகுதி பெற்றுள்ளார்

இலங்கை கடற்படையில் பணியாற்றும் பெண் மாலுமியான டெஹானி எகொடவெல, பெண்கள் 10 மீ வாயு துப்பாக்கி 0.177 போட்டி மூலம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் பொட்டித்தொடருக்கு தகுதி பெற்றுள்ளார்.

30 May 2021

நயினாதீவு பண்டைய ரஜமஹ விஹாரயத்தில் புதிய புத்தர் சிலைக்கு புதையல் வைக்கப்பட்டன

நயினாதீவு பண்டைய ரஜமஹ விஹாரயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புத்தர் சிலைக்கு புதையல் வைக்கும் விழா இன்று (2021 மே 26) வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் இடம்பெற்றது.

26 May 2021

கடற்படை சேவா வனிதா பிரிவு இதுவரை நடத்திய மிகப்பெரிய இரத்த தான நிகழ்வை அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி நடத்தியது

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்தின் படி கடற்படை சேவா வனிதா பிரிவு ஏற்பாடு செய்த இரத்த தான நிகழ்வொன்று கடற்படை உறுப்பினர்களின் பங்கேற்புடன் அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி இன்று (மே 24, 2021) நடைபெற்றதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படை தலைமையகத்தில் நடைபெற்ற இரத்த தான நிகழ்வில் கழந்து கொண்டார்.

24 May 2021

கடற்படையால் தேனீ வளர்ப்பை பிரபலப்படுத்தும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

தேனீ காலனிகளைப் பாதுகாப்பதற்காக உலகம் முழுவதும் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபை மே 20 ஐ உலக தேனீ தினமாக அறிவித்துள்ளதுடன் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் கடற்படையினரால் பராமரிக்கப்படுகின்ற தேனீ வளர்ப்பு திட்டத்தின் 50 வது தேனீ காலனியை நிறுவும் நிகழ்வு 2021 மே 20 அன்று உலக தேனீ தினத்துக்கு இணையாக நடைபெற்றது.

21 May 2021

கடற்படை போர்வீரர்களை நினைவுகூரும் தொடர் நிகழ்ச்சிகள்

12 வது தேசிய போர் வீரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, கடற்படை போர் வீரர்களை நினைவுகூரும் விழாவொன்று வெலிசரவுள்ள கடற்படையினர் நினைவுச்சின்னம் அருகில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலமையில் 2021 மே 19 ஆம் திகதி இடம்பெற்றதுடன் மேலும், கடற்படை வீரர்களை நினைவுகூரும் வகையில் கடற்படை கட்டளையில் தொடர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

21 May 2021

பூஸ்ஸ கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன

கடற்படையினரால் நிர்வகிக்கப்படுகின்ற காலி, பூஸ்ஸ கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் 2021 மே 19 ஆம் திகதி காலி பிஷப் ரேமன் விக்ரமசிங்கவின் தலைமையில் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

20 May 2021