நிகழ்வு-செய்தி

கடற்படையின் புதிய துனை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் வய்.என்.ஜெயரத்ன கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

கடற்படையின் புதிய துனை தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் வய்.என்.ஜெயரத்ன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இன்று (2021 மே 20) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

20 May 2021

ரியர் அட்மிரல் உதய ஹெட்டியாரச்சி கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

35 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் உதய ஹெட்டியாரச்சி இன்று (2021 மே 20) ஓய்வு பெற்றார்.

20 May 2021

தேசிய போர்வீரர்களின் நினைவு விழா அதிமேதகு ஜனாதிபதி தலைமையில் பத்தரமுல்லை படைவீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெற்றது

2021 ஆம் ஆண்டு தேசிய போர்வீரர்களின் நினைவு விழா, முப்படைகளின் சேனாதிபதி, அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (2021 மே 19) பத்தரமுல்லை படைவீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெற்றதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.

19 May 2021

கடற்படையினர் நினைவுகூறும் விழா கடற்படை தளபதி தலைமையில் வெலிசரையில் இடம்பெற்றது

ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத்தை தோற்கடித்ததற்காக யுத்ததின் போது உயிர் தியாகம் செய்த கடற்படையினர் நினைவு கூறும் விழா இன்று (மே 19) வெலிசரவுள்ள படையினர் நினைவுச்சின்னம் அருகில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலமையில் இடம்பெற்றன.

19 May 2021

ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

35 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன இன்று (2021 மே 19) ஓய்வு பெற்றார்.

19 May 2021

கெலனி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மிதக்கும் கழிவுத் தடையை மீண்டும் நிறுவ கடற்படையின் உதவி

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் கெலனி ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து சேதமடைந்த அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்காக நீர் பெறும் இடத்திற்கு (water intake well) கழிவுகள் நுழைவதைத் தடுக்கப் பயன்படுத்தப்பட்ட மிதக்கும் கழிவுத் தடையை (Floating Boom) மீண்டும் நிறுவ இலங்கை கடற்படை 2021 மே 18 ஆம் திகதி உதவி வழங்கியது.

19 May 2021

ரியர் அட்மிரல் உபுல் த சில்வா மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் உபுல் த சில்வா இன்று (2021 மே 18) மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

18 May 2021

COVID-19 சிகிச்சைகளுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை கடற்படைத் தளபதியின் மேற்பார்வைக்கு

கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான உள்கட்டமைப்புகள் மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை வலுப்படுத்தும் வகையில் கடற்படையினரின் பங்களிப்பால் கம்பஹ மாவட்டத்தில் நிறுவப்பட்ட கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்தில் மற்றும் வதுபிடிவல, கம்பஹ, மினுவங்கொடை ஆகிய வைத்தியசாலைகளில் வசதி விரிவாக்கத்தின் முன்னேற்றத்தை இன்று (2021 மே 15) கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன பார்வையிட்டார்.

15 May 2021

கட்டுநாயக்க ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தில் மேற்கொள்ளப்படும் கொவிட் 19 தடுப்பூசி திட்டத்துக்கு கடற்படையின் ஆதரவு

கொவிட் 19 பரவுவதை கட்டுப்படுத்துவதுக்காக மேற்கொள்ளப்படும் தடுப்பூசி திட்டத்தின் கீழ் கட்டுநாயக்க ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தில் கோவிட் 19 அபாயத்தை எதிர்கொண்டு சேவைகளை வழங்கும் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு இன்று (2021 மே 15) கட்டுநாயக்க ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தில் சுகாதார மருத்துவ அதிகாரியுடன் இணைந்து கடற்படையினரால் “சினோபார்ம்” (Sinopharm) தடுப்பூசியை வழங்கப்பட்டது.

15 May 2021

வெலிசர கடற்படை பொது மருத்துவமனையில் புதிய குழந்தைகள் வார்டு திறக்கப்பட்டது

கடற்படை உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் வெலிசர கடற்படை பொது மருத்துவமனையில் புதிய வசதியுடன் கட்டப்பட்ட குழந்தைகள் வார்டு இன்று (2021 மே 14) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வருகையுடன் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவினால் திறந்து வைக்கப்பட்டது.

14 May 2021