சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவர முயற்சித்த 1289 கிலோ பீடி இலைகளுடன் 02 சந்தேகநபர்கள் கல்பிட்டி கீரமுந்தலம பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர், கல்பிட்டி உச்சமுனை, கீரமுந்தலம் கடற்கரை மற்றும் கடற்பகுதியில் 2025 ஜனவரி மாதம் 20 ஆம் திகதி இரவு மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முட்பட்ட சுமார் ஆயிரத்து இருநூற்று எண்பத்தொன்பது (1289) கிலோகிராம் பீடி இலைகளுடன், (ஈரமான எடை) ஒரு டிங்கி படகு (01), இழுவைப் படகுகள் இரண்டு (02), உழவு இயந்திரங்கள் இரண்டு (02) மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கடற்படையினர், இலங்கை சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடல் பகுதி உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிறுவனத்திற்குச் சொந்தமான உச்சமுனை கடற்படைப் பிரிவினால், 2025 ஜனவரி 20 ஆம் திகதி இரவு கல்பிட்டி கீரமுந்தலம் கடல் மற்றும் கடற்கரையை உள்ளடக்கிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று இருப்பதை அவதானித்து சோதனையிட்டனர். அங்கு, குறித்த டிங்கி படகில் சட்டவிரோதமான முறையில் கொண்டு வர முட்பட்ட இருபத்தி ஒரு (21) பைகளில் அடைக்கப்பட்ட சுமார் அறுநூற்று ஐம்பத்து நான்கு (654) கிலோகிராம் பீடி இலைகளுடன் (ஈரமான எடை) சந்தேகநபர் ஒருவர் (01) மற்றும் குறித்த டிங்கி படகொன்றும் (01) இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பீடி இலைகளை நிலத்திற்கு கொண்டு செல்வதற்கு வந்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு (02) உழவு இயந்திரங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
அத்துடன், அந்த நடவடிக்கையுடன் இணைந்து கீரமுந்தலம் கடற்பகுதியில் சிறிய கப்பல்களைப் பயன்படுத்தி விஜய நிறுவனம் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, இருபத்தி ஒரு (21) பைகளில் அடைக்கப்பட்ட சுமார் அறுநூற்று முப்பத்தைந்து (635) கிலோகிராம் பீடி இலைகளுடன், (ஈரமான எடை) இரண்டு (02) இழுவைப் படகு மற்றும் சந்தேக நபரெருவர் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 33 மற்றும் 43 வயதுடைய கல்பிட்டி மற்றும் மண்டலக்குடா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த இரண்டு (02) சந்தேகநபர்கள், பீடி இலைகள், இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் இரண்டு (02) உழவு இயந்திரங்களையும் மேற்படி இயந்திரங்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேற்கு மாகாண கலால் விசேட பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டன.