சட்ட விரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 03 சந்தேக நபர்கள் கொழும்பில் கடற்படையினரால் கைது ‍

இலங்கை கடற்படை, கொழும்பு துறைமுகத்தை சூழவுள்ள கடற்பகுதியில் 2025 ஜனவரி மாதம் 25 முதல் நடத்தப்பட்ட சிறப்பு தேடல் நடவடிக்கையின் மூலம், சட்ட விரோதமான ஸ்பியர் கன் (Spear Gun) பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட்ட மூன்று (03) சந்தேக நபர்கள் மற்றும் (01) டிங்கி படகு கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

அதன்படி, 2025 ஜனவரி மாதம் 25 ஆம் திகதி மேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவனத்தால் கொழும்பு துறைமுகத்தை சூழவுள்ள கடற்பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு தேடல் நடவடிக்கையின் மூலம் சந்தேகத்திற்குரிய டிங்கி படகு (01) ஒன்று கண்காணிக்கப்பட்டது. அதன்போது, சட்ட விரோதமாக ஸ்பியர் கன் (Spear Gun) பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட்ட மூன்று (03) சந்தேக நபர்கள் மற்றும் (01) டிங்கி படகு கடற்படையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டது.

மேலும், இந்த தேடல் நடவடிக்கையின் மூலம்,கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 47 முதல் 62 வயதுக்குட்பட்டவர்களாவர். சந்தேக நபர்கள் தெஹிவளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மூன்று (03) சந்தேக நபர்களும் ஒரு (01) டிங்கி படகு மற்றும் மீன்பிடி உபகரணங்ளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திக்ஓவிட்ட மீன்பிடி கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.