இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மீன்பிடி படகுகள் மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படை, 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி இரவு மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன், இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் பதினான்கு (14) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கவும், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, 2025 பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி, மன்னாருக்கு வடக்கே இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்திய மீன்பிடிக் கப்பல்களை வடமத்திய கடற்படைக் கட்டளை அவதானித்ததோடு, அந்த மீன்பிடி கப்பல்களை இலங்கை கடற்பரப்பில் இருந்து அகற்றும் விசேட நடவடிக்கையில், வடக்கு கடற்படை கட்டளையின் விரைவு தாக்குதல் படகும் வட மத்திய கடற்படை கட்டளையின் கரையோர ரோந்து படகும் ஈடுபடுத்தப்பட்டதுடன், அங்கு, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி கப்பல்களுடன் பதினான்கு (14) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் படகில் இருந்த பதினான்கு (14) இந்திய மீனவர்கள் இரணைதீவுக்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளனர்.