சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 17 பேர் கைது

இலங்கை கடற்படையினர், 2025 பெப்ரவரி 13 முதல் 19 வரை கொக்கடி, நந்திக்கடல், முல்லைத்தீவு, ஆனவாசல், சின்னபாடு மற்றும் கடைக்காடு ஆகிய கடற்பகுதிகளிலும், கடற்பரப்புகளிலு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, வெடிமருந்துகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடித்தல், செல்லுபடியாகும் மீன்பிடி பத்திரம் இல்லாமல் சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் மற்றும் இரவு நேர சுழியோடி நடவடிக்கைகள் ஆகியவை கண்டறியப்பட்டதுடன், கடலட்டைகள் மற்றும் சங்குகளை பிடித்த பதினேழு (17) பேர், பன்னிரண்டு (12) மீன்பிடி படகுகள்,மோட்டார் சைக்கிலொன்று (01) மற்றும் நூற்று ஐம்பத்தாறு (156) சட்டவிரோத மீன்பிடி வலைகள், நூற்று எண்பத்து நான்கு (184) கடலட்டைகள் மற்றும் இருபத்தி இரண்டு (22) சங்குகளை கைது செய்யப்பட்டனர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை ஒடுக்கும் வகையில், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, 2025 பெப்ரவரி 13, 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கிழக்கு கடற்படைக் கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் கோட்டாபய நிறுவனத்தின் கடற்படையினர், முல்லைத்தீவு கடல் பகுதியிலும் நந்திக்கடல் தடாகம் பகுதியிலும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளில், சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு (06) மீனவர்கள், இரண்டு (02) டிங்கி படகுகள், ஆறு (06) சிறிய படகுகள் மற்றும் நூற்றி இருபத்தைந்து (125) சட்டவிரோத பொறி வலைகள், இருபத்தி ஒன்று (21) சட்டவிரோத டிராமல் வலைகள், ஒன்பது (09) சட்டவிரோத நைலோன் வலைகளும் ஒரு (01) பர்சீ வலையும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

2025 பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி திருகோணமலை கொக்கடி கடற்கரைப் பகுதியில் கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் பரகும்பாவினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம், வெடிமருந்துகளை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் பிடித்ததாக சந்தேகிக்கப்படும் மீன்களுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

மேலும், 2025 பெப்ரவரி 16ஆம் திகதி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிறுவனத்தினால், ஆனவாசல் கடற்பரப்பில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, மூன்று (03) மீனவர்கள், டிங்கி படகொன்று (01) நூற்று முப்பதொன்பது (139) கடலட்டைகளுடன் இருபத்திரெண்டு (22) சங்குகள், மற்றும் இலங்கை கடற்படை கப்பலான தம்பபன்னியால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் 2025 பெப்ரவரி 19 ஆம் திகதி ஹலாவத சின்னாபாடு பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் இரவு சுழியோடியின் போது கடற்கரும்புலிகளை பிடித்த ஆறு (06) மீனவர்கள், இரண்டு (02) படகுகள் மற்றும் நாற்பத்தைந்து (45) கடலட்டைகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

வடக்கு கடற்படை கட்டளையின் வெத்தலக்கேணி கடற்படை நிறுவனத்தினால் 2025 பெப்ரவரி 19 ஆம் திகதி முள்ளியான் கடைக்காடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, செல்லுபடியாகும் மீன்பிடி பத்திரம் இன்றி மீன்பிடியில் ஈடுபட்ட டிங்கி படகொன்றுடன் (01) சந்தேகநபர் ஒருவர் (01) கைப்பற்றப்பட்டார்.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 முதல் 58 வயதுக்குட்பட்ட முல்லைத்தீவு, புத்தளம், கல்பிட்டி, கொட்டாந்தீவு, தோப்பூர் மற்றும் முள்ளியான் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் அவர்களுடன் முல்லைத்தீவு உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகம், புத்தளம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை உதவி அலுவலகம், மீன்பிடித்துறை அலுவலகம், மீன்பிடித்துறை அதிகாரி, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பணிப்பாளர் அலுவலகம் மூதூர் கடற்றொழில் பரிசோதகர் மற்றும் யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.