சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கைது

இலங்கை கடற்படையினர் கிண்ணியா, சின்னவேலி, சள்ளிமுனை, நந்திக்கடல், வங்காலை ஆகிய கரையோர மற்றும் கடல் பிரதேசங்களில் 2025 பெப்ரவரி 19ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி மற்றும் இரவு நேரத்தில் சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏழு (07) பேர், இரண்டு (02) மீன்பிடி கப்பல்கள், சட்டவிரோத மீன்பிடி வலைகள் அறுபத்தைந்து (65), நான்கு (04) டெட்டனேட்டர்கள், இரண்டு (02) ஜெலக்னைட் குச்சிகள் மற்றும் மூன்று (03) அங்குலங்கள் நீளமான சேவா நூல்கள் நான்கு (04) என்பன கைப்பற்றப்பட்டன.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைக்குச் செந்தமான இலங்கை கடற்படை கப்பல் கோகண்ண நிறுவனத்தினால் 2025 பெப்ரவரி 19 ஆம் திகதி திருகோணமலை கிண்ணியா கடற்கரை பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, பொதியொன்றில் கரையோர பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு (04) டெட்டனேட்டர்கள், இரண்டு (02) ஜெலக்னைட் குச்சிகள் மற்றும் மூன்று அங்குல நீளமுள்ள நான்கு (04) சேவா நூல்கள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

2025 பெப்ரவரி 21 ஆம் திகதி இலங்கை கடற்படைக் கப்பலான லங்காபடுன நிறுவனத்தினால், சின்னவேளி பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக வெடிமருந்துகளைப் பயன்படுத்தி மீன்பிடித்ததாகச் சந்தேகிக்கப்படும் மீன்களுடன் இரண்டு (02) சந்தேக நபர்களையும், 2025 பெப்ரவரி 22 அன்று, இலங்கை கடற்படைக் கப்பலான வலகம்பா நிறுவனத்தால் திருகோணமலை சள்ளிமுனை கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் சட்டவிரோதமாக இரவு நேரத்தில் சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரு (02) சந்தேக நபர்களுடன் (01) டிங்கியொன்றையும் கடற்படையினர் கைது செய்தனர்.

மேலும், 2025 பெப்ரவரி 23ஆம் திகதி இலங்கை கடற்படைக் கப்பலான கோட்டாபய நிறுவனத்தினால், முல்லைத்தீவு நந்திக்கடல் கலப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம், ஐம்பத்தெட்டு (58) சட்டவிரோத பொறி வலைகள், நான்கு (04) சட்டவிரோத ட்ராமல் வலைகள் மற்றும் மூன்று (03) ஒற்றை இழை வலைகள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

மேலும், 2025 பெப்ரவரி 24 ஆம் திகதி, வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் புஸ்ஸதேவ நிறுவனத்தினால், மன்னார் வங்காலைப் பகுதிக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோத இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளுக்கு தயாராக இருந்த மூன்று (03) சந்தேக நபர்களுடன் டிங்கி படகொன்றினைக் (01) கைப்பற்றியதுடன், அவர்கள் 24 மற்றும் 71 வயதுடைய கல்முனைக்குடி, கல்முனை, நிலாவெளி, மன்னார் மற்றும் வங்காலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களுடனான மீன்பிடி கப்பல்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, குச்சவெளி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் உதவி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட டெட்டனேட்டர்கள், ஜெலட்டினைட் மற்றும் சேவா நூல் கொண்ட வணிக வெடிபொருட்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படும் வரை கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.