நடவடிக்கை செய்தி
யாழ்ப்பான நெடுந்தீவு மற்றும் குறிகட்டுவான் இடையே செயலற்ற நிலையில் இருந்த ஒரு படகை பாதுகாப்பாக தரையிறக்க கடற்படையின் உதவி

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் நெடுந்தீவிற்கு விஜயம் செய்யச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாத் தம்பதியரை நெடுந்தீவிற்கும் குறிகட்டுவானுக்கு இடைப்பட்ட கடலில் எரிபொருள் பற்றாக்குறையால் செயலற்று மிதந்து கொண்டிருந்த போது தேவையான உதவிகளை செய்த பின் கடற்படையினர் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர்.
10 Feb 2025
ஐஸ் போதைப்பொருள் மற்றும் போலி சிகரெட்டுகளுடன் 02 சந்தேகநபர்கள் மெதவச்சியில் கைது

2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி, இலங்கை கடற்படை, ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து, மெதவச்சி பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையில், இரண்டு (02) சந்தேகநபர்கள், மூன்று (03) கிராம் முந்நூற்று எழுபது (370) மில்லிகிராம் ஐஸ் மற்றும் நானூறு (400) போலியான சிகரட்களுடன் கைது செய்யப்பட்டனர்.
09 Feb 2025
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மீன்பிடி படகுகள் மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை, 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி இரவு மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன், இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் பதினான்கு (14) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
09 Feb 2025
கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், கிழக்குக் கடலில் ஆபத்தான நிலையில் இருந்த மீனவரைக் கரைக்குக் கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுப்புவதற்கு கடற்படையின் உதவி

இலங்கைக்கு கிழக்கே திருகோணமலை ஆழ்கடலில் விபத்துக்குள்ளான மீன்பிடிக் கப்பலில் இருந்த மீனவரை உடனடியாக வெளிநாட்டு கப்பலின் பங்களிப்புடன் தரையிறக்கப்பட்டு திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கடற்டையினரால் 2025 பெப்ரவரி 06 அன்று அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
06 Feb 2025
கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், இலங்கையின் தெற்கு ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்ட மற்றும் ஆபத்தான மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வருவதற்கு கடற்படையின் உதவி

இலங்கைக்கு தெற்கு ஆழ்கடலில், காலியில் இருந்து 43 கடல் மைல் (சுமார் 79 கி.மீ) தொலைவில் சுகவீனமடைந்த, மீன்பிடிக் கப்பலில் இருந்த மீனவர் ஒருவரை உடனடியாக நிலத்திற்கு அழைத்துச் சென்று இன்று (2025 பெப்ரவரி 06) சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கடற்டையினர் அனுப்பி வைத்தனர்.
06 Feb 2025
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வர முயன்ற விலங்குகள் மற்றும் மருந்துகளுடன் மூவர் மன்னாரில் கைது

இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மன்னார், பேசாலை பகுதியில் 2025 பெப்ரவரி 04 ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வர முயன்ற புறாக்கள் (PIGIONS) , ஆபிரிக்க காதல் பறவைகள் (AFRICAN LOVE BIRDS), பறக்கும் அணில்கள் (FLYING SQUIRRELS) மற்றும் மருந்து தொகைகளுடன் பயணித்த லொறி ஒன்றுடன், மூன்று (03) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
05 Feb 2025
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் கப்பல் ஒன்று மன்னார் தெற்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2025 பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி இரவு, மன்னாருக்கு தெற்கே இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் பத்து (10) பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
03 Feb 2025
101 சட்டவிரோத மீன்பிடி வலைகளுடன் சந்தேகநபர் கந்தலையில் கைது

இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து 2025 பெப்ரவரி 01 ஆம் திகதி கந்தலை பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்காக தயார் செய்யப்பட்டிருந்த நூற்றி ஒரு (101) தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் (Monofilament Nets) சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.
02 Feb 2025
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த 496 கிலோகிராம் உலர் இஞ்சி மற்றும் 515 பாதணிகள் என்பன நொரோச்சோலையில் கடற்படையினரால் கைது

கடற்படையினரால் நொரோச்சோலை ஆலங்குடா கடற்பகுதியில் 2025 பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி, மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத கடல் மார்க்கமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட முட்பட்ட சுமார் 496 கிலோகிராம் உலர் இஞ்சி மற்றும் சுமார் 515 ஜோடி காலணிகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகுகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
02 Feb 2025
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 1670 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் நீர்கொழும்பு கெபும்கொட பகுதி கடற்பரப்பில் 2025 பெப்ரவரி 01 ஆம் திகதி சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் ஆயிரத்து அறுநூற்று எழுபது (1670) கிலோ (500) கிராம் பீடி இலைகள் கொண்ட டிங்கி படகு (01) ஒன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.
02 Feb 2025