நடவடிக்கை செய்தி

நவதன்குளத்தில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது

இலங்கை கடற்படை, மதுரங்குளிய காவல்துறையினருடன் இணைந்து 2025 ஜனவரி 31 ஆம் திகதி பத்துலு ஓயாவின் நவதங்குளம் பகுதியில் நடத்தப்பட்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, கேரள கஞ்சா ஒரு (01) கிலோகிராம் ஐநூற்று எண்பத்தைந்து (585) கிராமுடன் ஒரு (01) சந்தேக நபரும் ஒரு (01) மோட்டார் சைக்கிளும் கைது செய்யப்பட்டது.

01 Feb 2025

தலைமன்னாரில் 3,492 சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், மற்றும் விமானப்படையினர் இணைந்து 2025 ஜனவரி 27 ஆம் திகதி தலைமன்னார் பேசாலை பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் மூவாயிரத்து நானூற்று இரண்டு (3,492) சங்குகளுடன், சந்தேகநபர் ஒருவர் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

28 Jan 2025

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்களையும் இந்திய மீன்பிடி படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்

2025 ஜனவரி 27, அன்று, யாழ்ப்பாணத்தின் வெல்வெட்டித்துறைப் பகுதியிலிருந்து இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த ஏராளமான இந்திய மீன்பிடிக் கப்பல்களை வடக்கு கடற்படைக் கட்டளை அவதானித்து, அந்த கட்டளைக்கு சொந்தமான கடற்படையின் கப்பல்களை அனுப்புவதன் மூலம் அந்த மீன்பிடி படகுகளை நாட்டின் கடல் எல்லையில் இருந்து அகற்றும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கு குறித்த கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு மீன் வளங்களை சேகரித்துக்கொண்டிருந்த பதின்மூன்று (13) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகொன்றும் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

28 Jan 2025

யாழ்ப்பாணத்தில் 132 சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் 2025 ஜனவரி 26 மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அங்கீகரிக்கப்பட்ட அனுமதி பத்திரம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட நூற்று முப்பத்தி இரண்டு (132) சங்குகளுடன் சந்தேகநபர் (01) ஒருவர் மற்றும் மோட்டார் சைக்கிள் (01) ஒன்றும் கைது செய்யப்பட்டது.

27 Jan 2025

கல்பிட்டியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினர், மற்றும் பொலிஸாருடன் இணைந்து 2025 ஜனவரி ஆம் திகதி 26 கல்பிட்டி, பள்ளிவாசல்துறை பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையில், விற்பனைக்கு தயாராக இருந்த ஐஸ் இலங்கை, மூன்று (03) கிராம் எண்பது (80) மில்லிகிராம் போதைப்பொருளுடன் சந்தேகநபர் (01) கைது செய்யப்பட்டார்.

27 Jan 2025

சட்ட விரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 03 சந்தேக நபர்கள் கொழும்பில் கடற்படையினரால் கைது ‍

இலங்கை கடற்படை, கொழும்பு துறைமுகத்தை சூழவுள்ள கடற்பகுதியில் 2025 ஜனவரி மாதம் 25 முதல் நடத்தப்பட்ட சிறப்பு தேடல் நடவடிக்கையின் மூலம், சட்ட விரோதமான ஸ்பியர் கன் (Spear Gun) பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட்ட மூன்று (03) சந்தேக நபர்கள் மற்றும் (01) டிங்கி படகு கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

26 Jan 2025

வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருந்த இருவர் சந்தேகத்தின் பேரில் மன்னாரில் கைது

மன்னார் போக்குவரத்துச் சபைக் களஞ்சியசாலைக்கு முன்பாகவும் சாந்திபுரம் பகுதியில் 2025 ஜனவரி 24ஆம் திகதி இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோதமான முறையில் பத்து (10) வாட்டர் ஜெல் வெடிப்பொருள் கூறுகளுடன், மின்சாரம் அல்லாத பத்து (10) டெட்டனேட்டர்கள் மற்றும் பாதுகாப்பு உருகி (02) இரண்டு அடி கொண்டு செல்லப்பட்ட மறைக்கப்பட்டுள்ளன இரண்டு (02) சந்தேக நபர்களுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

25 Jan 2025

புத்தளத்தில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது

இலங்கை கடற்படை, புத்தளம் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவுடன் இணைந்து இன்று (2025 ஜனவரி 25) அதிகாலை புத்தளம் சின்னப்பாடு கொட்டன்தீவு பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஒன்றிணைந்த சோதனை நடவடிக்கையின் போது, கேரள கஞ்சா 2 கிலோ 245 கிராம் அளவிலான தொகையுடன் ஒரு பெண் சந்தேகநபரை கைது செய்தனர்.

25 Jan 2025

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற 342 கிலோகிராம் ஏலக்காய் மற்றும் 1231 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் கல்பிட்டியில் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது

இலங்கை கடற்படையினர் 2025 ஜனவரி 24 ஆம் திகதி கல்பிட்டி கீரமுண்டலம் கடற்கரைப் பகுதி மற்றும் தோரயடி கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, 342 கிலோகிராம் ஏலக்காய் மற்றும் 1231 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் ஆகியவற்றைக் கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்களையும் ஒரு டிங்கி படகையும் கைப்பற்றினர். கடல் வழியாக நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

25 Jan 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை தொடரச்சியாக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது

தீவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க அனுராதபுரம் மாவட்டத்தின் பதவிய, புத்தங்கல, மகாகனதராவ மற்றும் அளுத்பாரகம பகுதிகளுக்கும், அம்பாறை மாவட்டத்தின் லாஹுகல பகுதிக்கும் கடற்படையின் 04 நிவாரணக் குழுக்களை 2025 ஜனவரி 24 அன்று கடற்படையால் அனுப்பி வைக்கப்பட்டது.

24 Jan 2025