நடவடிக்கை செய்தி

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், மாமுனை மற்றும் சுண்டிக்குளம் கடற்பரப்பில் 2023 ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி மற்றும் இன்று (2023 ஏப்ரல் 17) இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் மூலம் மின்சார விளக்குகளை பயன்படுத்தி மற்றும் இரவு சுழியோடி நடவடிக்கைகள் மூலம் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பன்னிரண்டு (12) பேருடன் மூன்று டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

18 Apr 2023

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் 3593 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 சந்தேகநபர்கள் கைது

அரச புலனாய்வு சேவையின் தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படை இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து இலங்கையின் தெற்கே ஹம்பாந்தோட்டை சிறிய ராவணன் பகுதியில் இருந்து சுமார் 132 கடல் மைல் (சுமார் 244 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் ஒரு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன் அப்போது 3593 மில்லியன் ரூபாய்க்கு மேல் வீதி பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் 179 கிலோ 654 கிராம் (பொதிகள் உட்பட) கொண்ட உள்ளூர் பல நாள் மீன்பிடி படகொன்றுடன் ஆறு சந்தேக நபர்கள் இலங்கை கடலோரக் காவல்படையின் கப்பல் சமுத்திரரக்ஷாவால் ஏப்ரல் 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் சந்தேக நபர்கள் இன்று (2023 ஏப்ரல் 17,) காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா குறித்த போதைப்பொருள் பரிசோதனையில் கலந்து கொண்டார்.

17 Apr 2023

சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 03 சந்தேகநபர்கள் வடக்கு கடலில் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், நெடுந்தீவிற்கு மேற்கு கடற்பரப்பில் 2023 ஏப்ரல் 15 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 62 கிலோவிற்கும் அதிகமான எடை கொண்ட கேரள கஞ்சாவுடன் இந்திய படகொன்று மற்றும் மூன்று (03) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

16 Apr 2023

சுமார் 67.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் கைது

தலைமன்னார் மணல்பாறையை அண்டிய கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் இன்று (02 ஏப்ரல் 2023) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்து வந்த ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine) 04 கிலோ (ஈரமான எடை). கைப்பற்றப்பட்டுள்ளது.

03 Apr 2023

அனுமதிப்பத்திரமின்றி 12,700 கடல் அட்டைகளை கொண்டு சென்ற 03 பேர் மன்னார் கடலில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2023 மார்ச் 30 ஆம் திகதி மன்னார், மனல்பாறையை அண்டிய கடற்பகுதியில் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது அனுமதிப்பத்திரம் இன்றி கடல் அட்டைகளை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி படகு, சுழியோடி உபகரணங்கள் மற்றும் 12700 கடல் அட்டைகளுடன் மூன்று (03) சந்தேக நபர்களை கைது செய்தனர்.

31 Mar 2023

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் 54 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மாதகல் கரையோரப் பகுதியில் மற்றும் குறித்த கரையோரப் பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் 2023 மார்ச் 28 ஆம் திகதி இரவு மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கைகளின் போது 165 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவைக் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

29 Mar 2023

சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை கொண்டு சென்ற நபர் ஒருவர் மன்னாரில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், மன்னார், பல்லேமுனை களப்பு பகுதியில் 2023 மார்ச் மாதம் 27 ஆம் திகதி மாலையில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் உலர்ந்த கடல் அட்டைகளை கொண்டு சென்ற நபர் ஒருவருடன் (01) நீர்மூழ்கிக் கருவிகள், சுமார் 230 கிலோகிராம் உலர் கடல் அட்டைகள் மற்றும் டிங்கி படகொன்று (01) கைப்பற்றப்பட்டது.

28 Mar 2023

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக இன்று (2023 மார்ச் 23) காலை வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இந்திய மீன்பிடி படகுகளுடன் 12 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம், அனலைதீவு மற்றும் கோவிலன் பகுதிகளுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 Mar 2023

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் கிழக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்

கடற்படை மற்றும் முல்லைத்தீவு கடற்தொழில் பரிசோதகர் அலுவலகம் இணைந்து 2023 மார்ச் மாதம் 22 ஆம் திகதி புல்முடே, துடுவ பிரதேசத்தில் மேற்கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையின் போது முறையான அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபருடன், சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்ட டிங்கி படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

23 Mar 2023

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த பீடி இலைகள் ஒருதொகை வென்னப்புவ கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

இலங்கை கடற்படையினர் இன்று (மார்ச் 22, 2023) அதிகாலை வென்னப்புவ கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்துகொண்டிருந்த சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரமுயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 379 கிலோவிற்கும் அதிகமான பீடி இலைகள் (ஈரமான எடை) கைது செய்துள்ளனர்.

22 Mar 2023